tamilnadu

img

தீண்டாமைக்கு எதிரான கள நாயகன் தோழர் என்.வரதராஜன்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முப்பெரும் தலைவர்கள் தோழர்கள் ஏ.பாலசுப்ர மணியம், என்.வரதராஜன், எஸ்.ஏ.தங்க ராஜன் ஆகியோர். தோழர் என்.வி. என்று  எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப் பட்டவர் என்.வரதராஜன். 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த வர். ஒரு பஞ்சாலைத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை துவக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக, மாநிலச் செயலாளராக உயர்ந்தவர்.  திண்டுக்கல்லில் உள்ள சௌந்திர ராஜா மில்லில் வேலைக்கு சேர்ந்தார். மதுரை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும் பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்  கப்பட்டு வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட னர். 1943 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி யில் உறுப்பினராக தன்னை இணைத் துக்கொண்டார். 

சைக்கிளில் உள்ள பையில் கட்சி யின் பிரசுரங்களை வைத்திருப்பார். தான்  சந்திக்கும் தோழர்களுக்கு அதனை விநி யோகிப்பார். தோழர் என்.வி. நகரசபை  உறுப்பினராகவும், 3 முறை சட்டமன்ற  உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். திண்டுக்கல்லில் உள்ள 100,  சோலைஹால் தியேட்டர் ரோடு முகவரி யில் கட்சி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கட்சியின் அலு வலகத்திற்கு வெளியே நின்று கொண்டு  நகரசுத்தி தொழிலாளர்கள் லீவ் படி வத்தை கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். ஏன் நிற்கிறீர்கள் உள்ளே வந்து அம ருங்கள் என்று அழைப்பார். பிறகு அவர்  களுடைய கோரிக்கைகளை கேட்டு நகர்  மன்றத்தில் பேசுவார். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதி ராகப் போராடுகின்ற தமிழ்நாடு தீண்  டாமை ஒழிப்பு முன்னணி உருவாக கார ணமாக இருந்தார்.

அருந்ததியர் மக்க ளுக்கு இட ஒதுக்கீடு கோரி சென்னையில் 2009 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான பேரணி நடத்தப்பட்டது. இதனையடுத்து அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த  பேச்சுவார்த்தையில் சிபிஎம் தலைமை யில் அனைத்து அருந்ததிய அமைப்பு களின் தலைவர்கள் பங்கேற்றனர். கோரிக்கையின் நியாயம் கருதி முதல்வர் கருணாநிதி அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து மருத்து வம், பொறியியற் கல்லூரிகளில் அருந்த திய முதல் தலைமுறை பட்டதாரி மாணவ,  மாணவியர்களுக்கு இடம் கிடைத்தது.  அரசு அலுவலகங்களில் அருந்ததியர் களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னு ரிமை வழங்கப்பட்டது. இது வரலாற்றில்  மிகப் பெரிய சாதனையாகும். இது குறித்து ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன் திண்டுக்கல்லில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், அருந்ததியர் சமூகத்தின் விடியலுக்கு வித்திட்டவர் தோழர் என்.வி. எங்கள் வீடு களில் சாமி படங்கள் இருக்கிறதோ இல்  லையோ, கட்டாயம் தோழர் என்.வி.யின்  படம் இருக்கும் என்றார். அந்தளவிற்கு அருந்ததிய மக்களால் நேசிக்கப்பட்டவர் தோழர் என்.வி., 

தீண்டாமை குறித்து என்.வி. கூறு கையில், நீங்கள் எந்த பக்கம் என்ற ஒரு  கேள்வியை எழுப்புவார். ஒரு மார்க்சிஸ்ட்  டாக இருந்து கொண்டு சக மனிதனை சக மனிதன் ஒதுக்கி வைப்பதை எப்படி  நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்.  இவர்களுக்கான சமூக நீதியை நாம் எப்  போது பெற்றுத்தர போகிறோம் என்பார்.  திண்டுக்கல்லில் பேகம்பூர் பகுதியில்  ஒரு காலத்தில் சவேரியார் பாளையத்தில்  இருந்து டீக்கடைக்கு செல்லும் கிறிஸ்தவ தலித்துகளுக்கு டீ கொடுக்க மாட்டார் கள். அப்படியே கொடுத்தாலும் இரட்டை  டம்ளர் முறையில் தான் கொடுப்பார்கள்.  இந்த தகவல் தெரிந்த ஏ.பாலசுப்ரமணி யம் அந்த கடைகளுக்கு சென்று இரட்டை டம்ளர்களை உடைத்தார். அந்த போராட்  டத்தின் தொடர்ச்சி தான் இந்த போராட் டம். இது போன்ற போராட்டங்களை செங்கொடி இயக்கம் எடுத்துச்செல்ல வேண்டும். அதுதான் ஒரு கம்யூனிஸ்ட் டின் கடமை என்று என்.வி.சொல்வார். அந்த அடிப்படையில் தான் தமிழகத்தில்  எங்கு தீண்டாமைக் கொடுமைகள் நடந்தா லும் அங்கே ஒரு படைவீரனாக கம்யூ னிஸ்ட்டுகள் மட்டுமே நிற்கிறார்கள். சமீ பத்தில் கூட வேங்கைவயல் கிராமத்தில் சாதி ஆதிக்கச் சக்தியினர் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தனர்.

இதனைக் கண்டித்து, அங்கு முதல் நபர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோர் சென்று, பாதிக்  கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர் களுக்கு ஆதரவாக நின்றனர்.  தீண்டாமைக்கு எதிராக, சாதி ஆண வப்படுகொலைக்கு எதிராக, ஆலய  நுழைவு போராட்டங்களாக, தெருக்களில்  செருப்பு போட்டு நடக்கும் போராட்டமாக என வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாக்காலத்தில் சிபிஎம் தொட ருகிறது. தீண்டாமையற்ற தமிழ் நாடாக மாற்றும் பயணம் தொடரும். 

-இலமு, திண்டுக்கல்