tamilnadu

img

தோழர் என். சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முதுபெரும் தலைவர் - விடு தலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாக, திங்களன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சளி மற்றும் காய்ச்சலால் ஏற்பட்ட ஆக்சிஜன் குறைவு  காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தோழர் சங்கரய்யாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் சீரிய சிகிச்சை அளித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அவரை நேரில் சென்று பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தி த்து சிகிச்சை தொடர்பான விவரங்களைக்கேட்டறிந்தனர். தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.  வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர். எனவே, தோழர் சங்கரய்யா உடல்நலம் தேறி, மீண்டும் நலம் பெற்று வருவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.