மதுரை, ஜன.10- மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க ஸ்தாபகர்களில் ஒருவரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழரு மான கருப்பன் (86) ஞாயிறன்று இரவு காலமானார். தோழர் கருப்பன் 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபக தலை வர்களில் ஒருவராகவும், சங்கத்தின் துவக்க காலத்து தலைவர்களான வீரபத்ரன், குருசாமி, அய்யாவு, எம்.பி. ராமச்சந்திரன், கந்தன், பாண்டிய ராஜன் ஆகியோரோடு சமகாலத் தலை வராகவும், பின்னர் வந்த ராஜகோபால், பாலசுப்பிரமணியன் ஆகிய தன்னை விட இளைய வயது தோழர்களோடு சாதாரண ஊழியர்களோடு ஒருவராக தன்னுடைய வயது முதிர்விலும் தளராத ஊக்கத்தோடும் செயல்பட்டு வந்தார். அதேபோல் 1975-ம் ஆண்டு அவசர நிலை காலத்தின் போது, மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார்.
அவர் செயல்பட்ட காலத்தில் கரும்பாலை பகுதியில் குறிப்பாக பெரும் பான்மையாக அப்பகுதியில் வசித்து வந்த அருந்ததியர் சமூகம் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் பல மான செல்வாக்கு மிக்க மார்க்சிஸ்ட் கட்சியை வளர்ந்து வந்தார். அழுக்கடைந்து போன ஆடை களோடு, வெற்றிலை சிவந்த வாயுடன் மாநகராட்சி தொழிலாளர்கள் பிரச்ச னைகளை அதிகாரிகளிடம் பேசும் போது, கொஞ்சமும் தயக்கமும், அச்சமு மின்றி பேசும் வல்லமை படைத்தவர் ‘தோழர் கருப்பன்’. எல்லாவற்றையும் விட அவர் தொழிலாளர்களால் நேசிக்கப்பட்ட தலைவராக மட்டுமல்ல; அதிகாரிகள் மிகவும் மதிக்கப்பட்ட தலைவராகவும் திகழ்ந்தார். முதலாவது கொரோனா காலத்தின் போது அவரது உடல்நிலை குன்ற ஆரம் பித்தது. அதுவரையிலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து வார்டு, வார்டாக நடந்தே சென்று தொழிலாளர்களை சந்திப் பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் கட்சிப் பணிகளை முன்னெடுப்பதில் செங்கொடி ஏந்தி முதன்மையான பங்கு வகித்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிறன்று இயற்கை எய்தினார். அன்னாரது மறைவு மதுரை மாநகர தொழிற்சங்க இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், இரா.லெனின், வை.ஸ்டாலின், டி.செல்வா, வடக்கு - 1 ஆம் பகுதிக் குழு செயலாளர் வி.கோட்டைச்சாமி, மாவட் டக் குழு உறுப்பினர்கள் பி.ராதா, டி.குமரவேல், சிஐடியு மதுரை மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், துணைத் தலைவர்கள் சி.சுப்பையா, எஸ்.சந்தியாகு, மாநகராட்சி தொழி லாளர் சங்க மாவட்ட பொதுச் செயலா ளர் ம.பாலசுப்பிரமணியம், தலைவர் மீனாட்சிசுந்தரம், நிர்வாகிகள் ரமேஷ், நாச்சியப்பன், சரவணன், தங்கபாண்டி, நல்லு, ரவி, கருப்பையா, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பொன்.கிருஷ் ணன், சம்மேளன நிர்வாகி நல்மூர்த்தி, தொமுச நிர்வாகிகள் தங்கவேலு, சௌ வுந்தர், அண்ணா தொழிற் சங்க நிர்வாகி கள் அம்மாசி, விசிக தொழிற்சங்க நிர்வாகிகள் பூமிநாதன், முத்து, மோகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று நடை பெற்றது.