தோழர் கே.வரதராசன் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்
திருச்சிராப்பள்ளி, மே 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலை வரும், கிராமப்புற மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவருமான மறைந்த தோழர் கே.வரதராசனின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று திருச்சியில் கடைப் பிடிக்கப்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி வெண்மணி இல்லத் தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச் செல்வம், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜன், மூத்த தோழர்கள் கே.வி. எஸ்.இந்துராஜ், சம்பத், ரங்கநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, சந்தா னம், மாவட்டக் குழு உறுப்பினர் சம்பத் உள்பட பலர் தோழர் கே.வரதராசன் படத்திற்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர். ஸ்ரீரங்கத்தில் தோழர் கே.வரதராஜன் இல்லத்தில் நடந்த நினைவு தின நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சந்தானம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், மூத்த தோழர் இலக்குவன், தீக்கதிர் திருச்சி பதிப்பு முன்னாள் பொது மேலாளர் அனந்தராஜன், பகுதிக்குழு உறுப் பினர்கள் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தி னர்.