மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தியாகிகளில் ஒருவர் தோழர் இடுவாய் ரத்தினசாமி. சிறுபான்மையினருக்கும், பட்டியலின மக்களுக்கும் ஆதரவாக இருந்ததும், சாதி ஆதிக்க சக்திகளை அனுசரித்து போகாததும், கடைசி வரை கம்யூனிஸ்ட்டாக இருப்பதுமே உனது மரணத்திற்கு காரணம் என்று இடுவாய் கிராமத்தின் ஆதிக்க சக்திகள், காரணங்களை பட்டியலிட்டு எழுதி வைத்து - அந்த படுகொலையை அரங்கேற்றினர். 19 ஆண்டுகள் ஆனபின்னரும் ஆதிக்க சக்திகள் விரும்பியது போல கம்யூனிஸ்ட்டுகளை அழித்து விட முடியவில்லை. ரத்தினசாமி சிந்திய ரத்தத் துளிகளிலிருந்து கம்யூனிச பெரு நெருப்பு பற்றிப் பரவுகிறது. சாதியற்ற சமூகம் எனும் ரத்தினசாமியின் கனவை அது நிச்சயம் நனவாக்கும்.