tamilnadu

img

பாட்டாளிகளின் தோழர்

தோழர் ஐ.மாயாண்டி பாரதி பள்ளி மாணவராக இருந்தபோதே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் என்பது அவரைப்பற்றி குறிப்பிடப்படும் புகழ்மிகு வாசகம். பிரிட்டிஷ் இந்தியா விலும் சுதந்திர இந்தியாவி லும் அவர் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.  பரலி சு.நெல்லையப்பரின் லோகோபகாரி பத்திரிகை களிலும் திருவிகவின் நவசக்தி பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தபிறகு ஜனசக்தியிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்ந்தபின்னர் தீக்கதிர் நாளிதழிலும் நீண்டகாலம் பணியாற்றியவர்.  பத்திரிகை பணியில் எளிமையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் எழுதுவது பாமர மக்களையும் கவர்ந்தது. படுகளத்தில் பாரததேவி, தூக்குமேடை தியாகி பாலு உள்ளிட்ட பல்வேறு சிறு நூல்களை எழுதியவர். பத்திரி கைகளில் பணியாற்றியபோதும், பொதுவுடமை இயக்கத்தின் பிரச்சாரகராக பட்டிதொட்டியெங்கும் உரை நிகழ்த்தியவர். பாவலர்  வரதராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்.  வாழ்வின் இறுதி வரை பொதுவுடமை தத்து வத்தை உயர்த்திப் பிடித்தவர். அதற்காகவே வாழ்நாளை  அர்ப்பணித்தவர். அவரது வழியில் நாமும் நடைபோடு வோம்.