தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் து.ஜானகிராமனின் 21ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள மாநில மைய அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எம்.வெங்கடேசன். செயலாளர் எஸ்.கண்ணன், விஜய கண்ணன், பூவராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.