திருத்துறைப்பூண்டி, ஏப்.10- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் முதுபெரும் தலைவர் பி.சீனி வாசராவ்-வின் 117-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருத்துறைப்பூண்டி மண்ணை சாலை யில் அமைந்துள்ள பி.சீனிவாசராவ் சிலைக்கு நகரச் செயலாளர் கோபு தலை மையில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்டக் குழு உறுப் பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் மரியாதை இதேபோல், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே பி.சீனிவாசராவ் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்க்கொடி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.