மதுரை:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பழங்காநத்தத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் பள்ளி ஆசிரியர்கள் பழங்காநத்தம் பகுதிக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் வந்து என்னைச் சந்தித்தனர்.
தங்களது பள்ளியின்பால் ஆசிரியர்களும் அந்தப் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கொண்டிருந்த ஈடுபாடு அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது.அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டேன். அப்போது குறிப்பாக10, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, தினசரிமாலையில் சிறப்பு பயிற்சி அளிப்பதில் ஆசிரியர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டதைப் பார்க்க முடிந் தது.அப்போது பள்ளியின் தலைமையாசிரியர், “வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டுவரும் மாணவிகள் மதியஉணவு சாப்பிட்டு, பிற்பகலில் பள்ளி நேரம் முடிந்தபின் சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்குப் போய்ச்சேர நெடுநேரமாகும். எனவே சிறப்பு வகுப்புக்கு முன் சத்தான சிற்றுண்டி கொடுத்தால் நன்றாக இருக்குமென்றார்”.
பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பேன்என உறுதியளித்து அதற்கான பணியில் ஈடுபட்டேன்.ரோட்டரி மிட் டவுன் நண்பர்களை அழைத்து உதவிசெய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் அதன்பிறகுசுமார் இரண்டு மாத காலம் சிறப்பு வகுப்பில் பங்கெடுத்தமாணவர்கள் அனைவருக்கும் தினசரி மாலை சிற்றுண்டி வழங்கினர்.இந்தாண்டு தேர்வு முடிவு வெளியான அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார். இன்று வெளிவந்த 12-ஆம் வகுப்பு தேர்வுமுடிவில், மாநகராட்சிப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றது நமது பள்ளி மட்டும்தான் சார், உங்கள் உதவிக்கு ரெம்ப நன்றி சார்” என்றார்.அதற்கு நான், “இந்த நன்றிக்குரியவர்கள் உரிய நேரத்தில் தலையிட்டு உதவிசெய்த பழங்காநத்தம் பகுதிக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ரோட்டரிமிட் டவுன் நண்பர்களும்தான். செயலுக்கான பலன் கிட்டாமல் போவதில்லை” என்று கூறினேன்.
பள்ளிக்கு கூடுதல் பெருமையும்... சிறப்பும்...
திங்களன்று இப்பள்ளிக்கு கூடுதல் பெருமையும் சிறப்பும் கிட்டியுள்ளது. தமிழக அரசு. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவந்ததன் தொடர்சியாக மதுரைமாநகராட்சிப் பள்ளியில் இருந்து முதலாவதாக மருத்துவபடிப்புக்குத் தேர்வு பெற்றுள்ள மாணவி பவித்ரா இப்பள்ளியின் மாணவி என்பது மேலும் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது.தகவலறிந்து உடனடியாக பள்ளிக்குச் சென்று மாணவிபவித்ரா-வையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும் வாழ்த்தினேன். உடன் தலைமை ஆசிரியர் மீனாட்சி. உயிரியல் ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பழங்காநத்தம் பகுதிகுழுச் செயலாளர் கா. இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.