tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல், ஏப்.22 திண்டுக்கல்லில் பொது இன்சூ ரன்ஸ் துறையில் பணியாற்றிய தோழர் பி.எஸ்.பெரியசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா மதுரை  மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் சார்பாக நடைபெற்றது.  வி.ஜி.எஸ் மண்டபத்தில் சனிக்  கிழமையன்று நடைபெற்ற இந்த  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கௌதமன் தலைமை  வகித்தார். மாவட்ட இணைச்செய லாளர் ஆர்.ரஞ்சித் வரவேற்றார். ஆர்.ஏ.எல் பிரபாகர், முரளிதரன், சுப்புராஜ்,ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காப்பீட்டுக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜே.குருமூர்த்தி, தீக்கதிர் முதன்மை  பொது மேலாளர் என்.பாண்டி ஆகி யோர் பாராட்டிப் பேசினர். கே.பிரபா கரன் (சிஐடியு), பி.ராம்குமார் (மருந்து பிரதிநிதி), எம்.பி.விவே கானந்தன் (அரசு ஊழியர்), ஏ. வைத்திலிங்க பூபதி (தமுஎகச), பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  தென் மண்டல இணைச்செயலா ளர் எம்.புஷ்பராஜன், பொதுச்செய லாளர் டி.பாண்டியராஜன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் ஓய்வூதியர் சங்க மண்டல துணைத்தலைவர் ஆர்ராஜேந்திரன், காப்பீட்டுக்கழக கோட்ட துணைத்தலைவர் எஸ்.ஏ. டி.வாஞ்சிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மனோஜ் கார்த்திக் நன்றி கூறினார்.