tamilnadu

img

கடமலையில் சமுதாய வளைகாப்பு

கடமலைக்குண்டு, அக்.21- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தில் வியா ழக்கிழமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கடமலை-மயிலை ஒன்றிய குழுத்தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  பங்கேற்று வாழ்த்தினார்.  கடமலை-மயிலை ஒன்றி யத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கர்பிணிகள் கலந்து கொண்டனர்.   மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உணவுமுறை கள் தொடர்பாக கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, அய்யப்பன், தி.மு.க ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, ஒன்றிய குழு துணை தலைவர் சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.