tamilnadu

img

சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் செவ்வஞ்சலி

கோவை, ஜன.9- சின்னியம்பாளையம் தியாகிகளின் 77-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உழைப்புச் சுரண்டலுக்கும், பாலி யல் சீண்டலுக்கும் எதிராகப் போரா டிய தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளை யம் தியாகிகளின் 77 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப் பட்டது. கோவை, சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நினை வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்ன தாக, இரு கட்சிகள் சார்பில் செஞ்சட்டை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், ஏஐடியுசி தேசியக்குழு உறுப்பினர் கே.எம்.செல்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர். இந்நிகழ்ச்சிகளில் திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.