tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகள் தனி வார்ப்பில் வார்க்கப்பட்டவர்கள்

குடியாத்தம், பிப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழரும், திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்கு நருமான மறைந்த தோழர் ஜூடோ  கே.கே.ரத்தினம் (ஜன.26)  உருவப் படத்தை கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.  ஞாயிறன்று (பிப்.5)  குடியாத்தத்தில் சிபிஎம் நகர செயலாளர் பி.காத்தவ ராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  குடியாத்தம் தாலுகா  செயலாளர் எஸ்.சிலம்பரசன் முன்னிலை வகித்தார். பேரணாம்பட்டு தாலுகா செயலாளர் சி.சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு அவரது படத்தைத் திறந்து வைத்து பேசுகை யில், “தோழர் ஜூடோ கே.கே.ரத்தினம் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் கட்சி  வேறுபாடின்றி, சாதி மத வேறுபாடின்றி எழுச்சியோடு அனைவரும் அஞ்சலி  செலுத்தினர். அதே போன்று இப்படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அனை வரும் வந்திருப்பது பாராட்டத்தக்க தாகும். அனைவரின் இதயங்களிலும் அவர் நிறைந்திருக்கிறார். போட்டி நிறைந்த திரைத்துறையில் சாதாரண மனிதராக நுழைந்து படிப்படியாகப் பயிற்சி பெற்று பயிற்சியாளராக மாறி, நீடித்து நின்று தடம் பதித்தவர். நாம் அனைவரும் அவரிடம் இருந்து அவர் தன் சுய முயற்சியின் மூலம் முன்னேறியதை கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

பஞ்சாலைத் தொழிலாளியாக பணிபுரிந்த போதும், திரைத்துறை யில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த  பொழுதும் அவர் தான் ஒரு கம்யூனிஸ்ட்  என்பதை எப்பொழுதும் எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. திரைத் துறைக்குச் சென்று முன்னேறிய பிறகு பலர் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்வர் அல்லது மறைத்துக் கொள்வர். ஆனால் தோழர் ஜூடோ ரத்தினம் தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை பறைசாற்ற எப்பொழுதும்  படப்பிடிப்பு இடத்துக்குச் செங்கொடி யுடன் தனது காரில் செல்வார். எந்த ஒரு நிலையிலும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருந்தவர். கம்யூனிஸ்ட்டுகள் தனி வார்ப்பில் வார்க்கப்பட்டவர்கள். தோழர் ஜூடோ கே.கே.ரத்தினம் எப் பொழுதும் உழைக்கும் மக்களுக்காக தன் சிந்தனையைச் செலுத்தியது போன்று அவரிடம் குடும்பத்தினரும் கம்யூனிஸ்ட் இயக்க பாதையில் தொட ர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், முன்னாள் நகர  மன்ற தலைவர் அதிமுக மாயா பாஸ்கர், காங்கிரஸ் விஜயன், திராவிடர் கழக மண்டல தலைவர் சடகோபன், சி பி ஐ  நகர ஒன்றிய செயலாளர் ஆனந்தன், விசிக குமரேசன், இந்தியக் குடியரசு கட்சி ரா.சி.தலித் குமார், மனிதநேய மக்கள் கட்சி பிஎஸ்.நிஜாமுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.ஒய்.யூசுப்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தோழர் ஜூடோ ரத்தினம் நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.