சென்னை, பிப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவரான டி. சேஷகிரி உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துள்ளது. தோழர் சேஷகிரி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றிய போது, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஊழியர் களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சங்கத்தின் முக்கிய தலைமை பொறுப்புகளுக்கு படிப்படியாக உயர்ந்தவர். ஒன்றுபட்ட சேலம் கோட்ட இன் சூரன்ஸ் அரங்க ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களை அமைப் பதில் முக்கிய பங்கு வகித்த வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட சேலம் மாவட்டக்குழு உறுப்பினராக, இடை கமிட்டி உறுப்பினராக, தமுஎகச வின் சேலம் மாவட்டச் செயலாள ராக திறம்பட பணியாற்றியவர். தீக்கதிர் நாளிதழை மாவட்டம் முழுவதும் உழைப்பாளி மக்களிடம் எடுத்துச் சென்றதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. தனது இறுதி மூச்சு வரை இடதுசாரி சிந்தனை களை இறுகப்பற்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறந்த தொழிற்சங்க வாதியாக திகழ்ந்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற் றுள்ள அன்னாரது குடும்பத்தி னருக்கும், காப்பீட்டுக் கழக ஊழி யர்களுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.