சென்னை, அக்.18- முதலமைச்சர் ஜெயலலிதா வின் மரணத்தில் அவரது தோழி வி.கே.சசிகலா, முன்னாள் அமைச் சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்து, தமிழக சட்டப்பேர வையில் செவ்வாயன்று அறிக்கை தாக்கல் செய்தது. 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரை யின்படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்த சசிகலாவும், பணியாளர் களும் தாமதிக்காமல் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ள னர். சுயநினைவின்றி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் என்றும் ஆணையம் தெரி வித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு கட்டுப் பாடற்ற நீரிழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற உபாதைகள் இருந்துள்ளன.
2016 செப்டம்பர் 27ஆம் தேதி காவிரி நதிநீர்க் கூட்டம் நடைபெற்ற போது புகைப்படம் எடுக்க ஜெய லலிதா அனுமதித்த போதும், ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் அதனை தடுத் துள்ளார். அன்று இரவே ஜெய லலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற் பட்டுள்ளது என்றும்; அக்டோபர் 11 ஆம் தேதி அமெரிக்க மருத்து வர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்து ரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது. ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத் தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட் டது என்ற காரணத்தை விளக்க வில்லை என்றும் ஆணையம் தெரி வித்திருக்கிறது. ஆஞ்சியோவை ஒத்திவைக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தொலைபேசியில் பரிந்துரைத்த தாகவும், மருத்துவர் பாபு ஆபிரகாம் முரண்பட்ட தகவலை ஆணையத் தில் பதிவு செய்திருப்பதையும் இந்த முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்கா மருத்துவரைத் தவிர, ஆர்.1 (சசிகலா ) பெற்று இருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
நெருக்கடியின் போது முடிவு எடுக்கும் திறன் பெற்றவர்கள், கார் டியோ அறுவை சிகிச்சையை தொட ராமல் தவறு இழைத்து இருக்க லாம். இது அமெரிக்கா மருத்துவ ரின் கருத்துப்படி ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012இல் மீண்டும் ஜெயலலிதா வுடன் இணைந்ததிலிருந்தும் இரு வருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. இதனால், சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என வும் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித் தது. ஆனால் அவர் இறந்த நேரம் டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும் என்றும் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவை அனுசரித்த அவரது மரு மகன் தீபக் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில் வி.கே.சசி கலா, கே.எஸ். சிவக்குமார், முன் னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகா தாரத் துறை முதன்மைச் செயலா ளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசா ரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும். மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெய லலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்தி ருப்பதால் அவர்களும் விசாரிக்கப் பட வேண்டும். அப்போதைய தலைமைச் செய லாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயி லாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய் யான தகவலை தெரிவித்த அப் பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.