tamilnadu

தமிழக பெண்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 19- அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முதல் பட்ஜெட் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. பெரும் எதிர்பார்ப்போடு பார்க்கப் பட்ட இந்த பட்ஜெட்டில்   அரசு பள்ளி களில்  பிளஸ்-2 வரை படித்த ஏழை எளிய மாணவிகளுக்கு பட்ட மேற்படிப்புக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள தைமாதர் சங்கம் வரவேற்கிறது. மேலும் அரசு பள்ளிகளை மேம்படுத்து வது, சமூக ஊடகங்களில் தவறான பிரச் சாரத்தை தடுத்து நிறுத்த சமூக ஊடக சிறப்புப்பிரிவு உள்ளிட்ட அம்சங்களை வரவேற்கிறது.  ஆனால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம்  உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப் பட்டுள்ளது. திருமண உதவித்தொகை  ரூ.50 ஆயிரம் காசோலையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.   ஆனால் கல்வி உதவித்தொகை 3 ஆண்டுகளில் சராசரியாக ரூ. 30 ஆயிரம் வரை தான்  வழங்கப்படும்.  திருமண உதவித்திட்டம்  பெண்கல்வி யை ஊக்கப்படுத்தும் விதத்திலும், ஏழை எளிய பெண்களின் திருமணத் திற்கு பேருதவியாகவும்  இருந்தது. எனவே அந்த திட்டத்தை ரத்து செய்தது சரியல்ல. மீண்டும் அந்த திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும். மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையிலும்,  அர சின் பெண்கள் கொள்கையிலும்  பெண் களின் வீட்டுப்பணிகள் மதிப்பீடு செய் யப்படும் எனவும்,குடும்ப பெண்க ளுக்கு மதிப்பூதிய தொகை வழங்கப் படும் என அறிவித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த தமி ழக பெண்களுக்கு  இது பெரும் ஏமாற்ற மளித்தது. மேலும் கொரனா தொற்றால் இறந்த பெற்றோரின் குழந்தைகளை பரா மரிக்கவும்,கல்வி ஏற்பாட்டிற்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் கோரு கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.