tamilnadu

img

கல்விக்கான முதல் மெய்நிகர் ஆய்வகம்

சென்னை, ஜூலை 5- சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகு தியில் உள்ள ஐந்து மாநகராட்சிப் பள்ளி களில் இந்தியாவிலேயே முதன் முறையாக மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) ஆய்வகமான ‘மெட்டா கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மெட்டாவெர்ஸ் எனப்படும் பகிர்ந்து கொள்ளப்படும் 3டி மெய்நிகர் கல்வி ஆய்வகம் தமிழத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை மையமாகக் கொண்ட விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி ஆகியவற்றை ஸ்டார்ட்அப் நிறுவன மான மெய்நிகரா இதனை தயாரித் ்துள்ளது.  தொடக்கவிழாவில் சேப்பா க்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட மெய்நிகர்உயர் தொழில்நுட்பப் பள்ளியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிறகு மாணவர்களுடன் இணைந்து ஹெட்செட் அணிந்து தாமும் பாடங் களை ஆர்வமுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர்) தொழில் நுட்பத்தில் பார்த்து மகிழ்ந்தார். சமீபத்திய ஆண்டுகளில் புதிய கற்பித்தல், கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை மெய்நிகர் உருவாக்கியுள்ளது. சிக்கலான அறிவியல் கருத்துகளை கற்பிப்பதற்கான ஒரு புதிய கல்வி முறையை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தருகிறது. சீனா, பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற நாடுகள் முழுமையான, கற்றல் சார்ந்த அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களின் முக்கிய பகுதி களை  மெய்நிகர் பார்த்து கற்றுக்கொள் ளலாம்.  இதுகுறித்து மெய்நிகரா இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரகுராமன் ரவி கூறுகை யில்  “பள்ளிகளில் உள்ள மெய்நிகர் ஆய்வகங்கள் மாணவர்களுக்கு முழுமையான மற்றும் கற்பனையான கற்றல் அனுபவத்தை வழங்கும். மெய்நிகர் கற்றல் முறை கற்பனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கூறினார்.