tamilnadu

img

சனாதன ஒழிப்பு மாநாட்டின் நினைவு சுடர் பயணம்

திருத்துறைப்பூண்டி, செப்.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர்  2 அன்று சென்னையில் நடைபெற உள்ள  சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கான நினைவு  சுடர் பயணம் திருவாரூர் மாவட்டத்திலி ருந்து புறப்பட்டது.  முன்னதாக, அடிமை விலங்கொடித்த சனாதன எதிர்ப்பு போராளி பி.சீனிவாசராவ் அவர்களின் திருத்துறைப்பூண்டி நினை விடத்திற்கு தமுஎகச மாவட்டக் குழு எம். சண்முகம் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் சுடரொளி யை அளிக்க, தமுஎகச திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  நிகழ்வில் நகர்மன்றத் துணைத் தலை வர் எம்.ஜெயபிரகாஷ், தமுஎகச மாவட்டக்  குழு உறுப்பினர் ஐ.வி.என்.இன்குலாப், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.