காந்தி சிலைக்கு ஆட்சியர் மரியாதை
நாகர்கோவில்.அக்.2- கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்தநாளை யொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத் தில் அவரது உருவப்படத்தி ற்கு, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னி லையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா செய்தியாளர்க ளிடம் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி கடற் கரையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அக்டோ பர் திங்கள் 2-ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அபூர்வ சூரிய ஒளி அண் ணல் காந்தியடிகளின் பீடத்தில் நண்பகல் 12 மணிய ளவில் விழும். இதனை காண உள்ளுர் மட்டுமல்லமால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அத னடிப்படையில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடும் வகை யிலும் சூரிய ஒளியினை பார்பதற்காகவும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அண்ணல் காந்தியடிகள் அவர்கள், இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டு மல்லாது, உலக நாடுக ளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். இந்தியா விற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்திஜி அவர்களின் பெருமைகளையும், தியா கங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தை யும்,கொள்கைகளையும், அவரது வழிகாட்டுத லின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, அண்ணல் காந்தி யடிகள் அவர்களுக்கு மிக வும் பெருமை சேர்ப்ப தாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் மேலும் காமராஜர் நினைவு நாளையொட்டி பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணி வித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலு வலர் காமராஜர், துணை இயக்குநர் மீன்வளம் சின்ன குப்பன், நாகர்கோவில் மாந கராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா,கன்னி யாகுமரி நகர்மன்ற துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், உட்பட அலுவ லர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
