மன்னார்குடி, பிப்.14- மகளிர் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்திலும் சிறந்த சேவையை வழங்கியமைக்காக சுதந்திரப் போராட்ட வீரர் நாராயணசாமி தேவரின் பேத்தியும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவருமான மருத்துவர் ரஞ்சனி பிரியாவின் மருத்துவ சேவையை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பாராட்டினார். இதற்கான நிகழ்ச்சியில் மருத்துவர் ரஞ்சனி பிரியா அழைக்கப்பட்டு, சிறந்த மருத்துவ சேவைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவர் ரஞ்சனி பிரியா முத்தப்பேட்டை ரஹமத் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் படித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.