கோவை, பிப்.22- தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற்ற நகர் ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மை யான இடங்களில் வெற்றிவாகை சூடினர். அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர் கள் படுதோல்வி அடைந்தனர். மேலும் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த கோவை, சேலம் மாவட்டங்களை திமுக கூட்டணி கைபற்றி வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் 3,359 வாக்குகள் பெற்று, அதிமுக மேயர் வேட்பாளராக கருதப்பட்ட கிருபாளினி படுதோல்வியடைய வைத்துள்ளார்.