சென்னை, மார்ச் 24- உடன்குடி பேரூராட்சி யில் தூய்மைப் பணியாளர் மரணமடைந்தது தொடர் பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்க மளித்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமாடன் (56). இவர் உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தங்கம்மாள். சுடலைமாடனை முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, தற் போதைய செயல் அலு வலர் பாபு ஆகியோர் சாதியை சொல்லி அவ தூறாக பேசியதாகவும், பணி நிரந்தரம் செய்ய பணம் கேட்டதாகவும் கூறப்படு கிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17 ஆம் தேதி விஷம் குடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரண மடைந்தார்.
இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை யில் வெள்ளியன்று (மார்ச் 24) கேள்வி நேரம் முடிந்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த னர். அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் கடம் பூர் ராஜூ,“ தூய்மை பணி யாளர் சுடலைமாடனிடம் பேரூராட்சி செயல் அலு வலர் பணம் கேட்டு மிரட்டி யதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன் குற்றவாளிகள் அனைவரை யும் தண்டிக்க வேண்டும்” என்றார். காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற குழுத் தலைவர் செல்வ ப்பெருந்தகை,“தூய்மைப் பணியாளர்களின் நலனை பாதுகாக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் நலவாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்”என்றார். இதற்கு விளக்கம் அளித்த நகராட்சி நிர்வாக த்துறை அமைச்சர் கே.என்.நேரு ,“இந்தச் சம்பவம் குறித்து ஆயிஷா கல்லாசி, பாபு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல், அரசு வேலை யை தடுத்தல் போன்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுடலை மாடன் மகளுக்கு உடன டியாக பணி வழங்கப்பட்டது. உடனடியாக ரூ. 6 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை விரை வில் வழங்கப்படும். இனி மேல் இது போன்ற நிகழ்வு கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப் படும்”என்றார்.