புதிய மாநில நிர்வாகிகள்
தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் 5 ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சம்மேளனத் தலைவராக கே.ஆறுமுக நயினார், பொதுச் செயலாளராக வி.குப்புசாமி, பொருளாளராக பி.பார்த்தசாரதி (தஞ்சாவூர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை பொதுச் செயலாளராக எம்.திருமலை(விருதுநகர்), ஜி.சந்திரன் (திருச்சி) ஆகியோரும், துணைத் தலைவராக எஸ்.மூர்த்தி, ஏ.பி.அன்பழகன், ஏ.ராயப்பன், எம்.மரியஜான்ரோஸ், அன்பு, கனகராஜ், ரத்தினவேல், துணைச் செயலாளர்களாக பி.முருகேசன், எம்.தட்சிணாமூர்த்தி, கே.கண்ணன், எம்.பி.மதிவாணன், என்.பிரபாகரன், செந்தாமரைக்கண்ணன், எம்.பூபதி ஆகியோர் உட்பட 55 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.
சாத்தூர், அக்.20- தொழிலாளர் நலன் மீது யார் கை வைத்தாலும் சிஐடியு வேடிக்கை பார்க்காது என்று சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் (சிஐடியு) 5 ஆவது மாநில மாநாட்டில் சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் பேசினார். அவர் மேலும்பேசியதாவது: இந்தியாவில் ஓலா, ஊபர் போன்ற நிறு வனங்கள் வந்துள்ளன. இதற்கு யார் முதலாளி என்பதே தொழிலாளிகளுக்குத் தெரியாது. எங்கோ இருந்துகொண்டு தொழிலாளர்களை அந்நிறுவனம் வேலை வாங்குகிறது. கர்நாடகா மாநிலத்தில் வாடகைக்கு பேட்டரி மற்றும் பெட்ரோலில் இயங்கக் கூடிய இரு சக்கர வாகனங்கள் உள்ளன. நாம் நிற்கும் இடத்தில் இருந்து செல்லிடப் பேசியில் உள்ள ஆப் மூலம் வாகனம் இருக்கும் இடத்தை தெரிந்து அதை எடுத்துக் கொண்டு விரும்பும் இடத்திற்கு செல்ல முடியும். அதற்கான வாட கையை வண்டியை நிறுத்தியவுடன் அவர்களே நமது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். இப்படி ஒரு தொழில்நுட்பம் வந்து நம் போன்ற தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை குறைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. தற்போது, அமெரிக்காவோடு போட்டி போடும் அளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் உழைக்கும் இளை ஞர்கள் அதிகமாக இருந்தபோதும் அவர் களுக்கு உரிய வேலை வாய்ப்புகள்இல்லை. இந்திய மக்களை எப்படி பாதுகாப்பது? என சிஐடியு கவலையுடன் பார்க்கிறது. தொழிலாளி நலன் மீது யார் கை வைத்தா லும் சிஐடியு வேடிக்கை பார்க்காது. அவர்களது நண்பனாக அது என்றைக்கும் உடன் நிற்கும்.
தமிழக அரசு, நீட், சிஏஏ போன்றவற்றை எதிர்க்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு சிஐடியு ஆதரவு தெரிவிக்கும். ஆனால் மின்வாரி யத்தில், துணை மின் நிலையம், பராமரிப்பு போன்றவற்றை ஒப்பந்தம் விட அரசு முயன்ற போது, அதை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தும் பணியை சிஐடியு செய்தது. சிஐடியுவிற்கு அரசியல் உண்டு. அரசியல் இல்லையென ஒரு இயக்கம் கூறுமானால் அது மக்களை ஏமாற்றும் செயலாகும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசியல் உள்ளது. நமது தொழிற்சங்கத்திற்கு வர்க்க அரசியல் உள்ளது. எனவே, நாம் தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் நாம் ஒன்றுபடக் கூடாது என்பதற்காக சாதியாக, மதமாக தொழிலாளர்களை பிரிக்கும் செயலில் சுரண்டுபவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் சிஐடியு, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். சுரண்டல் கூட்டத்திற்கு எதிர்வினை ஆற்றும் திறன் நமக்கு உண்டு. எனவே, சிஐடியுவை சாதி, மதத்தால் பிளவுபடுத்த முடியாது. நம்மைச் சுற்றியுள்ள தொழிலாளர்களின் நலனையும் பாதுகாப்பதுதான் வர்க்கப் பார்வையாகும். வர்க்க அரசியலை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.