ஓசூர் அசோக் லேலண்ட் ஐஐ வாயில் அருகில் இருந்து துவங்கிய கிருஷ்ணகிரி பயணக்குழுவினரை தொழிலாளர்கள் பெருந்திரளாக திரண்டு வரவேற்றனர். மாநில துணைத்தலைவர்கள் ஆர் சிங்காரவேலு கே ஆறுமுக நயினார் டி உதயகுமார் மாநில செயலாளர் சி நாகராஜன் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் வாசுதேவன், செயாலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
திருவள்ளுரில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையிலான குழுவினருக்கு ஞாயிறன்று திருவள்ளுர் மாவட்டத்தில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தலைவர் எஸ்.விஜயன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை திருவொற்றியூரில் இருந்து மே 21 அன்று காலை புறப்பட்ட சிஐடியு நடைபயணததில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் சென்னைக் கோட்டம் 1 & 2 முன்னணித் தோழர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். பயணக் குழு கன்வீனர் பாலகிருஷ்ணனுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல இணைச் செயலாளர் ஆர்.சர்வ மங்களா சால்வை அணிவித்தார்.
நாகர்கோவிலில் சிஐடியு நடைபயணத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் இணைந்தனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நெல்லைக் கோட்ட துணைத் தலைவர் மதுபால் பயணக் குழு தலைவர் குமாருக்கு சால்வை அணிவித்தார்.