tamilnadu

img

‘கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளம் தோழர் சங்கரய்யா’

பொதுவுடமை இயக்கத்தின்  ஸ்தாபக தலைவர் களில் ஒருவரும், இந் திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீர ரும், விவசாயிகள் இயக்கத்தின் தலை வரும் தமிழ்நாட்டில் தொழிலாளி வர்க்  கத்தை திரட்ட முன்முயற்சி எடுத்தவரு மான தோழர் என்.சங்கரய்யா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 102. மாணவப் பருவத்திலேயே நாட்டு விடு தலை போராட்ட இயக்கங்களில் பங்கெ டுத்து ஆங்கிலேய அரசால் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவர். எட்டு ஆண்டுகள் சிறைவாசம். மூன்றாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என நாட்டின் விடுதலைக் காகவும், உழைப்பாளி மக்களின் உரி மைகளுக்காகவும் தியாகம் புரிந்தவர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கே.  காமராஜ், பசும்பொன் முத்துராமலிங் கம். ப. ஜீவானந்தம், கே.பி.ஜானகி அம்  மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தலைவர்களுடன் சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் இணைந்து செயல் பட்டவர். மனிதருள் மாணிக்கமாக, வாழும் வரலாறாக, தனது காந்த குரலால் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் இன்றைய தலைமுறையினருக்கு உத்  வேகத்தை அளிப்பவராக திகழ்ந்தார். மதுரையில் பஞ்சாலைத் தொழிலா ளர்களை திரட்டி பல்வேறு போராட்டங் களை நடத்தி தொழிலாளர்களை வென்றெடுத்தார். தொழிலாளி வர்க்கத்  தின் நேச சக்தியான விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட தோழர் என்.எஸ். அவர்  கள், தொழிலாளி -விவசாயி ஒற்றுமை யின் அவசியத்தை வலியுறுத்தி வந் தார். தமிழ், பண்பாடு, கலாச்சாரம் உறுதி யுடன் தமிழ்மொழி, தமிழ்நாட்டிற்காக போராடியவர்.

பட்டியலின மக்கள் ஆலயபிரவேசத்திற்கு உதவி புரிந்த வர். சட்டமன்ற குழு தலைவராக இருந்த போது தமிழக மக்களின் நலன்களுக் காக பல்வேறு முன்மொழிவுகளை கொண்டு வந்தவர். சோசலிச கொள்கை யை தனது இறுதி மூச்சு வரை உறுதி யுடன் பின்பற்றியவர். இந்திய பொதுவுடமை இயக்கத்  தில் மிச்சமிருக்கிற ஒரு சில பொக்கி ஷங்களில் ஒருவராக நம்மோடு வாழ்ந்து வந்த தோழர் என்.எஸ்.  அவர்களது மறைவு பேரதிர்ச்சியா னது. தோழர் என்.எஸ். அவர்களுக்கு கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக் கூடிய உழைப்பாளி மக்களின் சார்பில் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு செவ் வஞ்சலியை செலுத்துகிறது. தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்கத்தை சார்ந்த தோழர்களுக்கும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்  பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிராக தோழர் என்.எஸ். அவர்களின் உறுதி மிக்க போர்குணத்தை உயர்த்திப் பிடிப்போம். பொதுவுடமை இயக் கத்தை அனைத்து பகுதி உழைப்பாளி மக்களிடத்தில் கொண்டு செல்வோம். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இவ்வாறு சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன்,  மாநில பொதுச்  செயலாளர் ஜி.சுகுமாறன் கூறியுள்ள னர்.