tamilnadu

img

நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பு தருக!

சென்னை, ஜன. 3 – முறைசாரா நலவாரிய உறுப்பினர் களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க கோரி செவ்வாயன்று (ஜன.3) தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமானம் உள்ளிட்ட 18 முறைசாரா நலவாரி யங்களில் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழி லாளர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கியதைப் போன்று, பொங்கல் சிறப்பு தொகுப்பு, வேட்டி-சேலை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில், தொழிலாளர் நல  ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், “கட்டுமானம், பனை தொழில் நீங்கலாக உள்ள இதர முறை சாரா தொழிலாளர் நல வாரியங்களில் முத்தரப்பு குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழு கூட்டங்களை மாதம் ஒருமுறை நடத்து வதை உறுதிப்படுத்த வேண்டும். இணையவழி பதிவு முறையில், கிராம அலுவலர் வாயிலாக பணி சரிபார்ப்பு சான்றிதழ் அளிக்கும் முறையை கைவிட்டு, நேரடி விண்ணப்பத்தை அனுமதிக்க வேண்டும்” என்றனர். “

கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவதைப் போன்றே இதர  முறைசாரா நலவாரிய தொழிலாளர் களுக்கும் வீடுகட்ட 4 லட்சம் ரூபாய்  மானியம் வழங்க வேண்டும், வாரி யத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியத்தை முடக்கும் விசார ணையை கைவிட வேண்டும், ஓய்வூதி யத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்” என்று கோரினர். பெண் தொழிலாளர்களுக்கு 55  வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர்கள், நல வாரிய பணப் பயன்களை காலதாமத மின்றி வழங்க போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில், துணைப் பொதுச்செயலாளர் கே.திருச்செல் வன், மாவட்டச் செயலாளர்கள் சி.திரு வேட்டை (மத்திய சென்னை), பா.பால கிருஷ்ணன் (தென்சென்னை), லெனின் சுந்தர் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து கட்டுமான கழக இயக்குநர் தர்மசீலனை சந்தித்து தலைவர்கள் மனு அளித்து பேசினர். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபுவும், செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமாரும் கலந்து கொண்டனர்.