tamilnadu

img

தொழிலாளர்களைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளை சூப்பர் கார்ப்பரேட்டுகளாக ஆக்குகிறார்கள்

நாகர்கோவில், நவ. 5- தொழிலாளர்களைச் சுரண்டி கார்ப்பரேட்டு களை சூப்பர் கார்ப்பரேட்டுகளாக ஆக்கு கிறார்கள் என்று ஆட்சியாளர்களை சிஐடியு  அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா குற்றம்சாட்டினார். சிஐடியு தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு கன்னியாகுமரியில் நவ.4,5,6 தேதிகளில் நடை பெறுகிறது. வெள்ளியன்று மாநில தலைவர்  அ.சவுந்தரராசன் தலைமையில் நடந்த பிரதி நிதிகள் மாநாட்டை துவக்கி வைத்து டாக்டர் கே.ஹேமலதா மேலும் பேசியதாவது: சென்னை யில் யமகா நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட ஒப்பந்தத்தை மாற்றி யமைக்க தொழிலாளர்கள் நடத்திய  போராட்ட த்துக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக  தொழிலாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்கள் மீதும் மக்களின் உரிமைகள் மீதும் ஆட்சியாளர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். வேலைப்பளு அதிகரிக்கிறது.

கூலி குறைக்கப் படுகிறது. சமூக பாதுகாப்பு பறிக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற  அடிப்படை உரிமைகள், சங்கம் அமைக்கும்  உரிமை, கூட்டுபேர உரிமை மீதெல்லாம் ஏராள மான தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம், விலை வாசி உயர்வு, மற்றபல தாக்குதல்கள் நடத்தப்படு கின்றன. இந்தியாவில் மோடி மட்டும்தான் இத்தகைய பிற்போக்குத்தனமான கொள்கை களை பின்பற்றுகிறார் என்பது அல்ல. உலகம் முழுவதும் மோடியைப்போல ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களும் இதேபோன்று தொழிலாளர்கள் மீதும் மக்களது உரிமை களின் மீதும்   தாக்குதலை தொடுக்கிறார்கள்.  அமெரிக்காவில் டிரம்ப் முதல் தற்போது இத்தா லியில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள வலதுசாரி பிற்போக்கு அதிபர் மெலோனி வரை இது போன்ற தாக்குதலை  நடத்துகிறார்கள்.

அதிகரிக்கும் பணவீக்கம்

விலைவாசி தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களின் உண்மை ஊதி யம் குறைந்து வருகிறது. எங்கு தொழிற்சங்கம் வலுவாக இருக்கிறதோ அங்கு விலைவாசி யை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளம் கிடைக் கிறது. நமது நாட்டில் 93 சதவிகிதம் முறை சாரா தொழிலாளிகள். தினக்கூலிகளாக, அங்கன் வாடி, ஆஷா போன்ற திட்டப்பணியாளர்களாக உள்ளனர். மதிய உணவு, கட்டுமானம், சிறு  மற்றும் தொழில்களில் பணியாற்றி வரு கிறார்கள். இவர்களது ஊதியமும்கூட குறைந்து வருகிறது. இங்கிலாந்தில் 40 சதவிகிதம் விலை வாசி உயர்ந்துள்ளது. அதுபோல் அமெரிக்கா,  ஐரோப்பாவிலும்கூட இத்தகைய நிலைமை தான். இப்போது உக்ரேன் போர் நடக்கிறது என்பதால் மட்டுமல்ல இதற்கு முன்பும் விலை வாசி உயர்வு இருக்கிறது. உற்பத்தி நிறுத்தம் காரணமான விலைவாசி உயர்வு அல்ல  இது.

இதற்கு எதிராக உலகம் முழுவதும்  தொழிலாளர்களும் மக்களும் போராட்டங் களை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்பு களாக சுருக்கி இருக்கிறார்கள். இந்த சட்டத் தொகுப்புகள் அனைத்தும் தொழிலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் வகையில் அமைந்து ள்ளன. சங்கம் அமைக்கும் உரிமை, வேலை  நிறுத்த உரிமை, கூட்டுபேர உரிமை என அனைத்து உரிமைகள் மீதும் இந்த சட்ட தொகுப்புகள் தாக்குதல் தொடுக்கின்றன. கனடா வில் அண்மையில் தொழிலாளர்கள் போராடக் கூடாது என ஒரு உத்தரவு பிறப்பிக்கப்ப ட்டுள்ளது. வேலை நிறுத்தம் செய்தால் தொழி லாளியும் அவர் சார்ந்த தொழிற்சங்கமும் தண்டிக்கப்படும். ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தால் 4 ஆயிரம் கனடா டாலர் சம்பள பிடித்தம். அவர் சார்ந்த தொழிற்சங்கம் 5 லட்சம் கனடா டாலர் அபராதமாக செலுத்த வேண்டும். இதேபோன்றுதான் இந்தியாவில் போராடும் தொழிலாளர்களையும் தொழிற் சங்கங்களையும் தண்டிக்கும் வகையில் இந்த சட்டத் தொகுப்புகள் உள்ளன. 

தொழிலாளர்கள் மீது தாக்குதல்

இந்தியாவைப்போலவே உலகம் முழுவதும் தொழிலாளர்களின் பணி நிலைமை நாள்தோறும் சீர்குலைந்து வருகிறது. மோசமான பணிச் சூழல் திணிக்கப்படுகிறது. அரசுகள் அமலாக்கிவரும் நவீன தாராள மயமே இதற்கெல்லாம் காரணம். தொழி லாளர்களின் சம்பாத்தியத்தை பணக்காரர் களுக்கு மாற்றுவது, அவர்களது லாபத்தை அதி கரிப்பது இதுதான் அரசாங்கங்கள் செய்யும் வேலை. 1990க்கு பிறகு புதிய தாராளமயக் கொள்கை வேகமாக புகுத்தப்படுகிறது. காங்கிரஸ் அரசு எதை பின்பற்றியதோ அதே கொள்கைகளைத்தான் பாஜகவும் அதைவிட சற்று வேகமாக அமல்படுத்துகிறது. தொழிலாளர்கள் மீது கூடுதல் சுமைகளை திணிப்பதற்காக அவர்களை கண்காணித்துக் கொண்டே  இருக்கிறார்கள். ஆனால் ஊதியத்தை மட்டும் உயர்த்துவதில்லை.

தொழிலாளர்களை சுரண்டி கார்ப்பரேட்டுகளை சூப்பர் கார்ப்பரேட்டுகளாக மாற்றும் சூழலை உருவாக்குகிறார்கள்.     கண்ணூரில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டோம், ‘சென்றடையாதவர்களை சென்றடைய வேண்டும் என்றும், விளைவுகளை மட்டும் பார்க்க கூடாது. அதற்கு காரணமான அரசின் கொள்கைகளை நாம் பார்க்க வேண்டும், அந்த கொள்கைகளுக்கு பின்னால் உள்ள வர்க்க அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்’,  என்றும் குறிப்பிட்டோம். முறைசார்ந்த தொழி லாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வில்லை. முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புக்கான பணப்பயன்கள் குறைந்துவருகிறது. இத்தகைய சூழல் உலகம் முழுவதும் இருக்கிறது.  பென்சன் திட்ட த்தில் பயன்களை குறைக்கும் நடவடிக்கை  போன்று எந்த பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் தொழிலாளர்களும் மக்களும்  பாதிப்புக்கு உள்ளாவது அரசின் கொள்கை யால்தான்.

ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்

ஆட்சிக்கு வருவதற்காக பல வாக்குறுதி களை இவர்கள் அளிக்கிறார்கள். மோடிகூட ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உரு வாக்குவோம். நல்ல நாட்கள் வருகிறது என் றெல்லாம் சொன்னார். உலகம் முழுவதும் வலதுசாரிகள் இதுபோன்ற முழக்கங்களைத் தான் எழுப்புகிறார்கள். தொழிலாளி வர்க்கத் தின் நலன்களை காப்பதுபோலவே நன்றாக நடிப்பார்கள். ஆனால் பதவிக்கு வந்த பிறகு  ஏற்கனவே என்ன கொள்கைகளை பின்பற்றி னார்களோ அதே கொள்கைகளை மேலும் தீவிர மாக பின்பற்றி தொழிலாளர்கள், பொதுமக்கள் வாழ்க்கைத்தரத்தில் சீரழிவையே ஏற்படுத்து வார்கள். தொழிலாளி வர்க்கம் ஏமாந்து டிரம்ப்புக்கு வாக்களித்தார்கள். பிரேசிலில் இப்போது இடதுசாரியான லூலா டி சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். அங்குகூட வலதுசாரியான போல்சானரோவுக்கு 49.1 சதவிகிதம் வாக்கு கிடைத்துள்ளது. தொழி லாளர்களில் ஒரு பகுதியினர் அவருக்கு வாக் களித்திருக்கிறார்கள்.  பிரான்ஸிலும்  இத்தாலியிலும் இப்படிப்பட்ட நிலைமைதான். அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போகிறார்கள். ஏனென்றால் தொழிலாளர்களின் மனதில் நமக்கு  நல்லது நடக்கும் என அரசின் செயல்பாடு மீது ஒரு மாயத்தோற்றம் இருக்கிறது. அவர்கள் பின்பற்றும் கொள்கைகளின் விளைவுகள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.  அந்த அதிருப்தி விலக வேண்டும் என்று, தாங்கள் மீண்டும்  ஆட்சிக்கு வர வேண்டும் என்று நடிக்கிறார்கள். ஆனால், அவர்கள்பின்பற்றும் கொள்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன்படு கிறது. இந்தியாவில் அம்பானி, அதானிகள் என்றால் வெளிநாடுகளில் அவர்களைவிட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன்படுகிறது.

தோற்றுப்போன ஏபிசிஎல்

நவீன தாராளமயக் கொள்கைகள் மக்க ளுக்கு எதிரானவை என்பதை தொழிலாளர் களும் மக்களும் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதனால்தான் அந்த கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களும் மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அருகாமையில் உள்ள  இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசுகள் நவீன தாராளமய கொள்கைகளை பின்பற்றி யதால்தான் இவ்வளவு பெரிய நெருக்கடி  ஏற்பட்டது. நவீன தாராளமயக் கொள்கைகளால் முதலாளித்துவம் தற்போது சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முடியவில்லை என்று ஐஎம்எப், சர்வதேச நிதி நிறுவனம் கூறுகிறது. ஆகவே அடுத்து என்ன என்கிற கேள்வி எழுகிறது. முதலாளித்துவ அமைப்பு, அமைப்பு ரீதியிலான நெருக்கடியில் இருக்கி றது. இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்றால் தற்போது அமல்படுத்திவரும் கொள்கைகளை மேலும் தீவிரமாக்க வேண்டும்  என்பதுதான் முதலாளித்துவம் கடைப்பிடிக்கும் யுத்தியாகும். ஏபிசிஎல் என்கிற பொருளாதார முறை தோற்றுவிட்டபோது நவீன தாராளமய கொள்கைகளை கொண்டு வந்தார்கள். வெளி நாடுகளில் 50 ஆண்டுகளாக நவீன தாராளமய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. இந்திய நாட்டில் 30 ஆண்டுகளாக இது பின்பற்றப்படு கிறது. அமைப்புக்குள் ஏற்படும் நெருக்கடிக்கு அதற்குள் தீர்வு இல்லை.  அமைப்பு  தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு மாற்று  என்ன? சிஐடியு அமைப்பு சட்டத்தில், முத லாளித்துவ அமைப்புக்கு மாற்றாக சுரண்ட லற்ற சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். முத லாளித்துவ நெருக்கடிக்கு தீர்வாக அவர்கள் சொல்வது ஒரு நோயால் பாதிக்கப்பட்டால் பழைய அதே மருந்தை கூடுதலாக சாப்பிட்டால் போதும் என்பது போலாகும். புதிய தாராளமய கொள்கைகளை வேகமாக அமலாக்க முடிவு செய்த முதலாளித்துவம் ஒரு முட்டுச்சந்தில் வந்து நிற்கிறது. அதன் விளைவுதான் பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டு மக்களின் உழைப்பால் உருவான பொது சொத்துகளை தனியார் மயமாக்குவது.

மாற்றத்தை நோக்கி..

சந்தை விரிவடைய வேண்டும். அதற்கு மக்களுடைய வாங்கும் சக்தி அதி கரிக்க வேண்டும். அது நடக்கவில்லை. மாறாக  நாட்டையே சூறையாடுகிறார்கள் கார்ப்பரேட்டு கள். முதலாளித்துவ அமைப்பு தோல்வி மட்டு மல்ல திவால் நிலைமையை அடைந்துள்ளது. முதலாளித்துவம் ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. நமது நாட்டின் வளங்களை பயன்படுத்தினால் அரசாங்கத்தால் அனைவருக்கும் இலவசமாக உணவு, கல்வி, மருத்துவம்  சாத்தியம். ஆனால் செல்வங்களை உருவாக்கும் மக்களு க்கு அவை செல்வதில்லை. மாறாக கார்ப்ப ரேட்டுகளின் கைகளுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது. இதை மக்களுக்கு புரிய வைத்து மாற்றத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். இதைத்தான் சிஐடியு அமைப்பு சட்டம் கூறுகிறது. கொள்கை களை நாம் புரிந்து கொண்டு மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.  

மக்களுக்கு பாதகமான கொள்கைகளை சரியான முறையில் அம்பலப்படுத்தி கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை புரியவைக்க  முடிந்ததோ அங்கெல்லாம் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. உதாரணமாக சிலி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஒரு சர்வாதிகார ஆட்சி நடந்தது. டாக்டர் அலண்டே கொலை செய்யப்பட்டார். அந்த சிலியில் போரா ட்டங்கள் மூலமாகத்தான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். நமது நாட்டில் போராட்டங்களை வலுப்படுத்த தொழிலாளி விவசாயி ஒற்றுமை என்கிற பதாகையை முன்னெடுத்து வருகிறோம். 500 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளைக் கொண்ட  சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையிலான வீரஞ்செறிந்த போராட்டத்துக்கு கோடிக் கணக்கான தொகையை தொழிலாளர்கள் வசூலித்து கொடுத்தார்கள் என்றார். அவரது உரையை சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.சிங்காரவேலு தமிழாக்கம் செய்தார்.