சென்னை, மே 1 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்டத் தொகுப்பு களை எதிர்த்து மாநில அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் முதன்முதலாக 1923ஆம் ஆண்டு மெரினா கடற்கரை யில் மே தின செங்கொடியை ஏற்றி கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம.சிங்காவேலர். இந்நிகழ்வின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 137ஆவது மேதின கொடியேற்ற விழா திங்களன்று மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பா ளர் சிலை அருகே நடைபெற்றது. சிஐடியு மத்தியசென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேதின கொடியை ஏற்றி வைத்து அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு: பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூ னிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்ட னர். 1923ஆம் ஆண்டு கான்பூர் சதி வழக்கில் சிங்காரவேலரும் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தார். அந்த அடக்குமுறை காலத்தில், துணிச்சலோடு சிங்கார வேலர் மெரினா கடற்கரையில் செங்கொடி ஏற்றி மே தினத்தை கொண்டாடினார். சிந்தனையாளர்களுக்கு கம்யூனிசக் கருத்துக்களை விதைத்தவராக, போதித்தவராக சிங்காரவேலர் இருந்தார். கம்யூனிச, விஞ்ஞானக் கருத்துக் களை ஏற்றுக்கொண்டு, மூடத்தனத்தை ஒழிக்க வேண்டும், மனிதர்களிடத்தில் சமத்துவம் வேண்டும் என்பதை நாடு முழு வதும் பரப்பினார்; பத்திரிகை நடத்தி னார். பொதுவுடமைக் கருத்துக் களை ஏற்று பெரியார் சில காலம் சிறப்பாகப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட்டார். பெரியாருக்கு இந்த உணர்வை கொடுத்தது அவரின் சோவியத் ரஷ்யா பயணம். அதில், தெளிவை உருவாக்கியவர்கள் சிங்காரவேல ரும், ஜீவாவும் என்பது குறிப்பிடத் தக்கது.
8 மணி நேர வேலை என்பது கருணை அடிப்படையிலான கோரிக்கை அல்ல. முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு, லாபத்தை குவிப்பதற்கு எதிரான நட வடிக்கை. லாபத்தின் ஊற்றுக்கண் வேலைநேரத்திலும், தொழிலாளர் கள் உற்பத்தி அதிகரிப்பிலும்தான் உள்ளது. எனவேதான் முதலாளி கள் வேலை நேரத்தை அதிகரிக்கக் கோருகிறார்கள். சட்டத்தையும் மீறி இன்றைக்கும் 12, 14 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். சட்டத்தை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆட்சி யாளர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமானால் வலு வான தொழிற்சங்கம் தேவை. தொழி லாளியை கொள்ளையடிக்கும் போது அதை எதிர்த்துப் போராடும் அமைப்பை உருவாக்கி, வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சிங்காரவேலர் போன் றோர் உணர்த்தினர்.
நீண்ட நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களில் 60 வயது கடந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அரசு போக்கு வரத்துக் கழகத்தில் சாவு எண்ணி க்கை அதிகமாக உள்ளது. சர்வ தேசத் தொழிலாளர் அமைப்பின் முதல் விதியே வேலை நேரம் 8 மணி யாக இருக்க வேண்டும் என்பது தான். இதனை ஏற்றுக் கொண்ட இந்தியா வேலை நேரத்தை மாற்று கிறது. அதை தமிழக அரசு செய்ய முற்பட்டது. 8 மணி நேர வேலை முறையை அகற்றும் மோசமான சட்டத்தை அரசு கொண்டு வந்தது. கடும் எதிர்ப்பால் அதை தற்போது திரும்பப் பெற்றுள்ளதை வர வேற்கிறோம். இதனால் தொழில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இல்லை யெனில் 1967-71ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களின் போர்க்காடாக இருந்தது போன்ற நிலை உருவாகி இருக்கும். இந்த வேலைநேர முறையை வேறு வழிகளில் எந்தச் சூழ்நிலை யிலும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கக் கூடாது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திற்கு விதிகளை வகுக்கும்போது, வேலைநேரத்தில் எந்த மாற்றத்தை யும் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒன்றிய அரசின் 4 சட்டத்தொகுப்பு களை எதிர்த்து மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்கள் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அந்த சோசலிச சமு தாயத்தை உருவாக்க, நமது அமைப்புகளை அரசியலாக வலுவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்டத் தலை வர் எம்.தயாளன், செயலாளர் சி. திருவேட்டை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.