tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிஐடியு அமைப்பு தினம்  அகில இந்திய பொது குழு  முடிவுகள் விளக்கப் பேரவை

அரியலூர், ஜூன் 11- சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் 55 ஆம் ஆண்டு அமைப்பு தின அகில இந்திய பொதுக்குழு முடிவுகள் விளக்க பேரவை நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் சமுதாயக் கூடத்தில் துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம்  தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டக் குழு முடிவு களை மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி விளக்கி பேசி னார். மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் அமைப்பு தினம் சம்பந்தமாக விளக்கிப் பேசினார். மாநில துணைத்  தலைவர் எஸ்.ரங்கராஜ், அகில இந்திய பொது குழு முடிவு களை விளக்கி பேசினார்.  மாவட்ட நிர்வாகிகள் சந்தானம். ராஜாமணி, சகுந்தலா,  மெய்யப்பன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

நவீன இறால் பண்ணைகள் அமைக்கும் பணி தொடங்கியது

 மயிலாடுதுறை, ஜூன் 11 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகே நண்ட லாறு பகுதியில் தாட்கோ மூலம் நவீன இறால் பண்ணை கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.  மேலும் தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற் றும் வகையில் பல்வேறு பொருளாதார திட்டங்களை நடை முறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தாட்கோவுக்கு சொந்தமான இடத்தில் சிபா நிறுவனத்துடன் இணைந்து  பொறையார் நண்டலாறு பகுதியில், நன்நீர் இறால் வளர்ப்பு  பண்ணை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. 53 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 3 ஏக்கர் நிலத்தில்  இறால் பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இப்பணியை சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வக்குமார், தாட்கோ செயற்பொறியாளர் வெங்கடேசன், தரங்கம்பாடி வட்டாட் சியர் சதீஷ்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.  மேலும் சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, பொறை யார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும்  வருவாய்  ஆய்வாளர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா  மற்றும் அரசு அலுவலர்கள், தாட்கோ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 30-க்குள் கைரேகை  பதிவு செய்வது கட்டாயம்

பெரம்பலூர், ஜூன் 11- பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும்  AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பி னர்களின் கைரேகை அல்லது கருவிழி பதிவினை 30.06.2025-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள PoS  இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.  எனவே குடும்ப அட்டைதாரர்கள் வேலை நாட்களில்  தாங்கள் பொருள் பெறும் நியாய விலைக் கடைக்கு நேரில்  சென்று, குடும்பத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்து  கொள்ளாதவர்கள் தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி, e-KYC பதிவு  செய்வது தொடர்பாக ஜூன் 12, 14 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறவுள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர்களில் இதுவரை கை ரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்யாத நபர்கள்  இம்முகாமில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி யுள்ளவர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாய  விலைக்கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சிறப்பு முகாம் நாட்கள் தவிர மற்ற  அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடை களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை ரேகையினை பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழித்துறை, ஜூன் 11- கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின்  உத்தரவுப்படி மார்த்தாண்டம்  டிஎஸ்பி  நல்லசிவம்  மேற்பார்வையில் மார்த்தாண்டம் போக்குவரத்து சார்பு  ஆய்வாளர்  செல்லசாமி  முன்னிலையில் என்சிசி மாண வர்கள் சேர்ந்து மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதி யில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தி. துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.