திருவாரூர், அக்.8 - நலவாரிய பதிவுகள், புதுப்பித்தல் மற்றும் அரசின் இதர நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில், நலவாரிய தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக, சிஐடியு திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் கணினி மையம் துவக்கப்பட்டுள்ளது. சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.முருகையன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.மாலதி, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மையத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.சிங்காரன் பேசுகையில், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் திருவாரூர் சிஐடியு மாவட்ட அமைப்பின் சார்பாக, குறைந்த கட்டணத்தில் அனைவரும் பயன்பெறும் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு வழங்கும் நலவாரியப் பயன்களை தொழிலாளர்கள் பெற்றிட வேண்டும்” என்றார்.