ஜூலை 27, 28-இல் சிஐடியு கரூர் மாவட்ட மாநாடு
கரூர், ஜூன் 11 - சிஐடியு கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் க. பரமத்தியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட மாநாடு வர வேற்பு குழு கூட்டம் க. பரமத்தியில் நடை பெற்றது. மாநாட்டு வரவேற்பு குழு கூட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. ஜீவா னந்தம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி வரவேற்பு குழு தலைவராகவும், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது வரவேற்பு குழு செயலாள ராகவும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் குப்பம் கா.கந்தசாமி பொருளாளராக வும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 57 பேர் கொண்ட வர வேற்பு குழு தேர்வு செய்யப் பட்டது. மாவட்ட மாநாட்டின் முதல் நாளான ஜூலை 27 அன்று மாலை நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் சுமார் 2000 தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜூலை 28 அன்று பொது மாநாடு நடைபெற உள்ளது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் தண்ட பாணி, ஹோச்சுமின், கிருஷ்ணமூர்த்தி, எம். சுப்பிரமணியன், ராஜேந்திரன், ரெங்கராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.