tamilnadu

img

சிஐடியு பொன்விழா கருத்தரங்கம்

திருநெல்வேலி, மே 31-சிஐடியுவின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு நெல்லையில் பொன்விழா கருத்தரங்கம் நடைபெற்றது.பாளை. நவஜீவன் டிரஸ்டில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட பொருளாளர் எஸ்.வண்ணமுத்து, மாநிலக் குழுஉறுப்பினர்கள் எஸ்.பெருமாள், ஆரியமுல்லை, மாவட்ட துணைத் தலைவர்ம.ராஜாங்கம், வீரவநல்லூர் முன்னாள்பேரூராட்சி தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். மாநிலச் செயலாளர் எம்.மகாலெட்சுமி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.முத்துகிருஷ்ணன், எம்.சுடலைராஜ், எஸ்.ஆறுமுகம், டி.காமராஜ், ஜான் ரோஸ், எம்.பீர்முகம்மது ஷா, மாணிக்கண்டன், ஜோதி, ராஜன், கந்தசாமி, எல்.சரவணபெருமாள், ஆர்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.