சிஐடியு இனிப்பு வழங்கி கொண்டாடட்டம்
ஜுன் 1- ஓட்டுநர் தினம்
திருவாரூர், ஜுன் 1- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சிஐடியு நீடாமங்கலம் ஒன்றிய அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஜுன் 1- ஓட்டுநர் தினம் மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு பெரியார் சிலை அருகே இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் கிளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் அம்பிகாபதி, சாலை விதிகளை மதிப்போம், சாலை விபத்தை தவிர்ப்போம், ஓட்டுநர் தொழிலை நேசிப்போம், பெண்கள், குழந்தைகள் பயணத்தை பாதுகாப்போம், மோட்டார் வாகன தொழிலை நேசிப்போம், உரிமைகளை பாதுகாப்போம், சுமை பணி வாகனத்தை சுகமான பயணமாக்குவோம் என்ற உறுதிமொழி வாசகத்தை படிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சங்கர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பிலிப்ராஜ் மற்றும் அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.