சிஐடியு 55 ஆம் ஆண்டு அமைப்பு தின விழா
திருச்சிராப்பள்ளி, மே 30- சிஐடியு தொழிற்சங்கத்தின் 55 ஆம் ஆண்டு அமைப்பு தின விழா வெள்ளி அன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது. சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், முத்தரசநல்லூர், காமராஜ் நகரில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்டுமான சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் சிஐடியு கொடியை ஏற்றினார். பின்னர் கேக் வெட்டி சிஐடியு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். நிர்வாகிகள் முருகன், செல்வமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், மலைக்கோட்டை பணிமனை முன்பு நடந்த விழாவிற்கு சங்க துணை பொதுச்செயலாளர் முருகன் தலைமை வகித்தார். சிஐடியு கொடியை மூத்த தோழர். துரைராஜ் ஏற்றினார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் கேக் வெட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் துணைத் தலைவர் செல்வராஜ், மத்திய சங்க துணைத்தலைவர் பிரபு, டெப்போ தலைவர் அரவிந்த், பொருளாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடி சிஐடியு-வின் 55 ஆம் ஆண்டு அமைப்பு தினம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிஐடியு மற்றும் இணைப்பு சங்கங்களால் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜீ. ரகுபதி தலைமை வகித்தார். மன்னார்குடி மஸ்தான் பள்ளி தெருவில் உள்ள மன்னார்குடி சிஐடி அலுவலகத்தில் சிஐடியு கொடியை திருவாரூர் மாவட்ட ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ. அரிகரன் ஏற்றி வைத்தார். சாலையோர வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜி. முத்துகிருஷ்ணன், பிஎஸ்என்எல் கே. பிச்சைக்கண்ணு, உள்ளாட்சி மேனாள் மாவட்டச் செயலாளர் கே. முனியாண்டி, உள்ளாட்சி சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.பி. தனுஷ்கோடி, சிபிஎம் நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், தமுஎகச நகரச் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன், பி. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.