புதிய நீதிபதி பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், திங்களன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹேமந்த் சந்தன் கவுடர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதி பதவியேற்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 19 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 அன்று தொடங்கியது. ஜூன் 9 ஆம் தேதி கடைசி நாளாகும். திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர். ஜூன் 4 அன்று திமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக மாடல் அல்ல இது!
சென்னை: தமிழக முதலமைச்சரும் திமுக தலை வருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “திமுக பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து முத்திரை பதித்தி ருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மண்ணுக்குரிய கோலா கலத்துடன் ‘பொதுக்குழுவா திமுக மாநாடா!’ என்று பிர மிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாகச் சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களி லிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல” என்று தெரி வித்துள்ளார்.
ஆக.2 - சிம்பொனி மழை
சென்னை: லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் இசைக்கப் போவதாக ‘இசைஞானி’ இளையராஜா அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப் போல, அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து, அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன். இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 8 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 4 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையில் செவ்வாய் மற்றும் புதனன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்களன்று (ஜூன் 2) தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. ஜூன் 4 அன்று பொது பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது.
மன்னாரில் தமிழக நாட்டுப் படகு இராமேஸ்வரம்:
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்திய-இலங்கை எல்லை கடலோரப் பகுதிகளில் இரு நாட்டு கடற்படை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறன்று அதிகாலை இலங்கையிலுள்ள மன்னார் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகினை இலங்கை கடற் படையினர் சோதனையிட்டதில், இன்ஜின் பொருத்தப்படாத நாட்டுப் படகின் பதி வெண்ணை கொண்டு, அது கன்னியா குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தை சேர்ந்தது என முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
சென்னை, ஜூன் 2 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட 10 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தை களுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் திங்களன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து, திருக்கோவில் பொது தரிசன பாதையில் வந்த பக்தர்க ளின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி (நிர்வா கம்), திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணை யர் ஞானசேகர், மண்டல இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு முகக்கவசம் தேவை இல்லை
சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்களன்று (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, திறப்புக்காக பள்ளி கள் தயார் நிலையில் வைக்கப் பட்டன. இந்த நிலையில் இந்தியா வில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. தற்போது பரவிவரும் கொரோனா வீரியம் இல்லாதவை. எனவே பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ஞாயி றன்று திடீர் மாரடைப்பால் காலமானார். பிரபல இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணி யாற்றியவர், ‘மதயா னைக் கூட்டம்’, ‘இராவணக் கோட்டம்’ ஆகிய திரைப் படங்களை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். மது ரையில் ஒரு தயாரிப்பாள ரிடம் கதை சொல்லிவிட்டு, ஞாயிறன்று இரவு பேருந் தில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடி யாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயி ரிழந்தார். விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த வர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயி லாகவும், நேரிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறனின் ‘ஆடு களம்’ திரைப்படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும், படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி தனது திறமையை வெளிப்படுத்தி யவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்
மதுரை: மதுரையின் முதல் சிப்காட் தொழில் பூங்கா, சுற்றுச்சூழல் அனு மதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ரூ.68 கோடியில் அமைய வுள்ள தொழிற்பூங்கா மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலூர் பூதமங்கலம், வஞ்சிநகரம், கொடுக் கப்பட்டி கிராமங்களில் 278.26 ஏக்கரில் அமை கிறது தொழில் பூங்கா. சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படாத தொழிற் சாலை களுக்கான பிரத் யேக தொழில் பூங்காவாக இது அமைய உள்ளது.