சென்னை, செப்.24- சென்னை தலைமைச் செயலகத்தில் 4,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கத் திற்கான தேர்தல் வெள்ளிக் கிழமை (செப். 23) நடைபெற் றது. இதில் அகரம், வின்னர்ஸ், அச்சிவர்ஸ், டீம் என 4 அணி கள் போட்டியிட்டன. மொத்த முள்ள 3,664 வாக்குகளில் 3,044 வாக்குகள் பதிவானது. இதில் கு.வெங்கடேசன் தலை மையிலான அகரம் அணி அனைத்து இடங்களையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நிதித்துறை அரசு துணைச் செயலாளர் கு.வெங்கடே சன் 1,384 வாக்குகள் பெற்று தலைவராகவும், சட்டமன்ற பேரவை செயலகம் உதவி பிரிவு அலுவலர் சு. ஹரி சங் கர் 1,234 வாக்குகள் பெற்று செயலாளராகவும், வணிக வரி மற்றும் பதிவுத்துறை பிரிவு அலுவலர் சே.பிரபா 1,075 வாக்குகள் பெற்று பொரு ளாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறை உதவி பிரிவு அலுவலர் இரா. லெனின் 1,287 வாக்குகள் பெற்று இணைச் செயலாளராகவும் (பொது), உள்துறை உதவி பிரிவு அலுவலர் அ.ஜீவன் 958 வாக்குகள் பெற்று (விளை யாட்டு மற்றும் பண்பாடு) இணைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அகரம் அணியை எதிர்த்து போட்டியிட்ட மற்ற மூன்று அணிகளும் படுதோல்வி யை சந்தித்தது. அனைத்து பதவிகளையும் கைப்பற்றி சாதனைப் படைத்த அகரம் அணியின் வெற்றியை ஊழி யர்கள் கொண்டாடினர். தலை வர், செயலாளர், பொருளா ளர் உள்ளிட்ட அனைத்து நிர் வாகிகளுக்கும் மாலை அணி வித்து வரவேற்றனர்.