tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தில்லி பயணம்

சென்னை, மார்ச் 13- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தமாதம் 2ஆம் தேதி தில்லி செல்ல உள்ளார். அவர்  முதலமைச்சராக பதவியேற்ற பின் தில்லி செல்வது இது  மூன்றாவது முறையாகும். தலைநகர் தில்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறி வாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அந்த அலு வலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தில்லி செல்கிறார். தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் காங்கி ரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.