tamilnadu

img

அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த மாநில அரசு முன்னுரிமை

திருப்பத்தூர், ஜூன் 29- திருப்பத்தூரில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த மாநில அரசு முன்னுரிமை அளிப்பதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை புதனன்று (ஜூன் 29) திறந்துவைத்துப் பேசிய அவர், ரூ.109 கோடியில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலகம், சமுதாயக் கூடம், கல்லூரி விடுதிகள், 16 சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழிற்பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். நான்கு கிராமங்களில் பாம்பாற்றின் மீது பாலம் அமைக்கப்படும். ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜலகம்பாறை அருவியில் பல  திட்டபணிக்கு வனத்துறை அனுப்பி யுள்ள கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலை யம் கூடுதல் படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்படும். உயர்கல்வி பயில புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சமூக நீதி தத்துவத்தை 1920ஆம் ஆண்டே தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது. பாஜகவை தவிர அனைத்து மாநில முதல்வர்களும் சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். பெரும்பாலான மாநில அரசுகளுக்கு சமூக நீதி குறித்து வழிகாட்டும் மாநில மாக தமிழ்நாடு உள்ளது என்றார். அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பதை முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒவ்வொரு குடும்பமும் வளம் பெற பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். அவர்கள் வேலைக்காக தான் நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. உங்கள் வாழ்வு உயர தமிழ்நாடு உயரும் என்று கூறினார். இதில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ெஜகத்ரட்சகன், கதிர் ஆனந்த் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

வேலூர் புதிய பேருந்து நிலையம்

வேலூரில் ரூ.41 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  மக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வழிதடத்தையும் அவர் துவக்கி வைத்தார். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்த பேருந்து நிலையம் 9.25 ஹெக்டேர் பரப்பளவில் நவீன வசதிக ளுடன் கட்டப்பட்டுள்ளது. சூரிய  மின்சக்தியில் இயங்கும் வகையில்  எல்இடி விளக்குகள் , மின்விசிறிகள்,  மோட்டார் பம்புகள் அமைக்கப்பட் டுள்ளன. 82 கடைகள், 3 உணவு விடுதி கள், 11 காத்திருப்பு அறைகள், முதல்  தளத்திற்கு செல்ல மின்தூக்கி வசதி யுடன் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் குமரவேல் பாண்டியன், மாநக ராட்சி மேயர் சுஜா்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.