tamilnadu

img

அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க மாதந்தோறும் முகாம்

கோவை, பிப்.7- கோவையில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மாதந்தோறும் முகாம்கள் நடைபெறும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங் கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொம தேக, முஸ்லீம் லிக், மனிதநேய மக்கள்  கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக கோவை மாநகரத்தில் 100 இடங்களிலும், மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களிலும் டிஜிட்டல் திரை அமைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சா ரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சியில் தொடரட்டும் நம்  ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக் கிறோம். ஐந்து ஆண்டு காலத்தில் வாக் குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதான் நல்ல ஆட்சி. ஒரு ஆண்டு கூட  ஆகாத நிலையில் சொன்ன வாக்குறுதி களில் முக்கால் பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மேலும், கொரோ னா கட்டுப்பாடு காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியாத சூழல். அத னால்தான் காணொலி மூலம் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கோவையில் முதல் கூட்டமாக நடைபெறுகிறது.  நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் ஒரு தாய் பிள்ளை பாசத்தாலும், அன்பாலும், உறவாலும், நீங்கள் வேறல்ல நான் வேறல்ல என்ற உணர்வுடன் நான் பரப்புரை மேற்கொள்கிறேன்.

இலவச மின்சாரம் அறிவித்தார் கலைஞர். விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் கோரிக் கையான இலவச மின்சாரத்தை வழங்கியது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி தான். கடன் தள்ளு படி, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக.  திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சி யில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. வேளாண்மை பொறுத்தளவில் நாராயணசாமி நாயுடு கனவினை நிறைவேற்றியது கழக ஆட்சி. கோவைக்கு கழக ஆட்சி  செய்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த பத்து  ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சியால் சாதனைகளை சொல்ல முடியுமா?. 8 மாத காலத்தில் கோவைக்காக பல திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. வேறு ஆட்சி யில் இவ்வாறு செய்யப்பட்டு உள்ளதா? இது ஸ்டாலினோட அரசு அல்ல உங்கள் அரசு. போன ஆட்சி யில் பணத்தை கொள்ளை அடித்த வர்களைத்தான் பார்த்திருப்பீர்கள். 

கடந்த ஆட்சி நிர்வாகம் சரியில்லாத காரத்தினால்தான் கோவை மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் செய்து தரப்படும். கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நடை பெற்று வரும் மேம்பால பணி கள் தேதி குறிப்பிட்டு விரைந்து முடிக்கப்படும். குடிநீர் இணைப்பில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப் படும். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அர சிடம் உரிமைகளை போராடி பெறு வதும் கழக ஆட்சிதான். நீட் தேர்வால், பல லட்சம்  செலவு செய்து பயிற்சி பெற்று மருத்துவ ராகலாம். ஆனால், இது அனைத்து மாணவர்களாலும் இயலாது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும்  பிப்.8 ஆம்தேதி யன்று (இன்று) நிறைவேற்றப்படும். அதிமுக அரசு அனுப்பிய மசோதா நிராகரிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் கேள்வி கேட்டேன். ஆனால், எந்த தகவலும் வரவில்லை என அப்போதைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி யதை மறைக்க நினைத்தார்கள். அன்று நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற மறுத்தார்கள். படிப்ப தற்கே தகுதி வேண்டும் என்பதே இந்த நீட்  தான். மருத்துவ படிப்பு க்கு சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஆகிவிட முடியாது. தேர்வில் வெற்றி  பெற்றால்தான் முடியும். நீட்டை மேலோட்டமாக பார்க்கக் கூடாது.  முகமூடியை கழற்றி பார்க்க வேண்டும். மக்களுக்கு விரோத மான எத்தனையோ செயல்களை ஒன்றிய அரசு செய்து வருகிறது. அதனை எதிர்த்து போராடுகிறோம். நீட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார். அடிமை அரசு அதிமுக தலையாட்டி ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் இந்த பிரச்சனை. நீட் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு  விரோதமாக எது வந்தாலும் எதிர்ப்போம், அனுமதிக்கமாட் டோம். உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால் கோட்டையில் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள், அனைத்து கிராமங்களுக்கும், தெருக்களுக்கும் செல்லும். கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு களை வாரி வழங்கி, அனைவரை யும் வெற்றி பெறச்செய்யுங்கள், என்றார்.

முன்னதாக, இந்நிகழ்வுகளில் மின்சாரைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையாகிருஷ்ணன், சி.ஆர்.ராமச் சந்திரன், மருதமலை சேனாதிபதி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், வி.இராமமூர்த்தி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மதிமுக ஆர்.ஆர்.மோகன் குமார் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். முதல்வரின் காணொலி உரையை கேட்க கோவை மாவட்டத்தில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.