சென்னை, செப்.26- ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ் நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலா பயணி கள் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அந்நிய செலாவணியை ஈர்க்கும் வகை யிலும் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா கொள்கை-2023 யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் செவ்வாயன்று (செப்.26) வெளியிட்டார். இந்தக் கொள்கையானது சுற்றுலா திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்து வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார் வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப்பயிற்சி யில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணைய தளத்தினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.