சென்னை, அக்.21- “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன் களை மிகவும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற் கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரி வானதொரு சாதிவாரிக் கணக் கெடுப்பை இணைத்து நடத்து வதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும்” என்று பிரதமர் நரேந் திர மோடிக்கு, தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். பின்தங்கிய மக்களின் சமூக- பொருளாதார வாழ்நிலையை உயர்த்துவதற்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண் டும் என்று நீண்டகாலமாக வலி யுறுத்தப்பட்டு வருகிறது. அண் மையில் பீகார் மாநில அரசு, அந்த மாநில அளவில் சாதிவாரிக் கணக் கெடுப்பை நடத்தி தரவுகளை வெளியிட்டது.
பீகார் மாநிலத்தில் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (மாநில மக்கள் தொகையில் 36.0148 சதவிகிதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (மக்கள் தொகையில் 27.1286 சத விகிதம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயி ரத்து 820 பேர் (19.6518 சதவிகி தம்) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்; 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 சதவிகி தம்) பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 2 லட் சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 சதவிகிதம்) பொதுப் பிரிவினர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவிகி தம், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவிகிதம் என்று அந்த கணக்கெடுப்பு கூறியது. இந்தக் கணக்கெடுப்பு இந் திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு இதேபோல சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பை நடத்துவோம் என ராகுல் காந்தியும் அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநி லங்களில் விரைவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, ஒன்றிய அரசு நாடு தழுவிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரத மர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பை நடத் துவதற்கான ஆயத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திட்ட மிட்டுத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை உங்கள் கவ னத்திற்குக் கொண்டு வர விரும்பு கிறேன். 2021-இல் நடைபெறவிருந்த முந்தைய மக்கள்தொகை கணக் கெடுப்பை நடத்த முடிய வில்லை என்பதையும், சாதி தொடர்பான முக்கியமான தரவு முடிவுகள் நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தகுதியுள்ள மக்களின் வாழ்க்கையைத் தொடும் என்பதையும் கருத்தில் கொண்டு, அதை மேலும் தாம தப்படுத்தக்கூடாது என்று வலி யுறுத்துகிறேன்.
மக்கள்தொகைக் கணக்கெ டுப்புத் தரவு எப்பொழுதும் கொள்கைகளை வகுப்பதற்கும், பின்தங்கியவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான குறிப்பிட்ட தலையீடுகளை குறி வைப்பதற்கும் அடித்தளமாக உள்ளது. வரலாற்று ரீதியாக நமது சமூகத்தில் சமூக முன் னேற்றத்திற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கும் முக்கிய காரணி யாக சாதி இருந்து வருவதால், அது பற்றிய உண்மைத் தரவுகள் பொதுக் களத்தில் கிடைப்பது அவசியம். இது மட்டுமே நமது கடந்த கால திட்டங்களின் தாக் கத்தை பகுப்பாய்வு செய்வ தற்கும் எதிர்காலத்திற்கான உத்திகளைத் திட்டமிடுவதற்கும் பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும். இருப்பினும், இந்தியாவில் கடைசியாக 1931 இல் மட்டுமே சாதி மக்கள் தொகைக் கணக்கெ டுப்பு நடத்தப்பட்டது என்பதால் சமகாலத் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 90 ஆண்டுகளில், நம் நாட்டின் மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார நிலப்பரப்பு பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ஆனால் நமது சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர், பல கடந்தகால கொள்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். எனவே, சமூக நீதி, சமத்துவத்தை உள்ளடக்கிய வளர்ச்சி தொடர்பான அனைத்து அழுத்த மான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தேசிய அளவில் பொதுவான நிலையான செயல்முறையிலிருந்து பெறப்பட்ட சம காலத் தரவுகள் திரட்டப்படுவது இன்றிய மையாதது. பீகார் போன்ற சில மாநில அரசுகள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் இந்த திசையில் நல்ல முயற்சிகளை மேற் கொண்டுள்ளன, மேலும் சில அத்தகைய நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இந்த மாநிலங்களின் குறிப்பிட்ட முன்முயற்சிகள் மற்றும் அவற்றின் தரவு முடிவுகள் நமது சமூகம் மற்றும் அதன் தேவைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், உள்ளீடுகள் மற்றும் செயல்முறைகளின் நாடு தழுவிய ஒப்பீட்டின் நன்மை அவற்றிற்கு இல்லை. கூடுதலாக, ஒரு பாடமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பதால், அத்தகைய தரவு சேகரிப்புக்கான சட்டப்பூர்வ ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு சட்டப்பூர்வ முத்திரை இல்லை. எனவே, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் கூடிய இந்திய சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான பொருத்தமான தளத்தை வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.
மேற்கூறியவற்றின் வெளிச்சத்தில், முன்மொழியப்பட்ட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே நமது சமூகத்தின் சாதி அமைப்பு மற்றும் சமூக - பொருளாதார குறிகாட்டிகளில் அதன் பிரதிபலிப்பு பற்றிய விரிவான மற்றும் நம்பகமான தரவுகளை வழங்க முடியும். இது சான்று அடிப்படையிலான கொள்கை வகுப்பை செயல்படுத்தி, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய நம் அனைவருக்கும் உதவுகிறது. பத்தாண்டு காலத்திற்கு ஒருமுறை வழக்கமாக நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒரே நேரத்தில் இந்த பணியை மேற்கொள்வது, நாடு முழு வதும் தரவுகளின் ஒப்பீட்டை உறுதி செய்வ தோடு மட்டுமல்லாமல் வளங்களின் பயன் பாட்டை மேம்படுத்தும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை, வரவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த முன்முயற்சி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக் கப்படக்கூடிய பிரிவினருக்கு எடுத்துச் செல்வதற்கும், வலிமையான, மேலும் அனை வரையும் உள்ளடக்கிய இந்தியாவை உரு வாக்குவதற்கும் ஒரு மகத்தான நட வடிக்கையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த விஷ யத்தில் உங்கள் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார்.