tamilnadu

img

தமிழ்நாட்டில் ‘இந்தியா - ஜப்பான்’ மாநாடு

சென்னை, மே 29- இந்தியா - ஜப்பானிய  கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட  வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சென்னையில் 2024 ஜனவரில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு  முறை பயணம் மேற்கொண் டுள்ளார். திங்களன்று (மே 29) டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, சென்னை யில் 2024 ஜனவரி மாதம்  நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட் டிற்கு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு முதல்வர், மேம்பட்ட உற்பத்தியில் சிறந்த பங்குதாரர்கள் ஜப்பானியர்கள். எனவே, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த மனிதவளம் உள்ளதால் 4.0 போன்ற தொழில்நுட்பப் பகுதிகள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, இந்தியா - ஜப்பானிய கூட்டு  உச்சி மாநாட்டை தமிழ் நாட்டில் நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், சென்னையில் நடைபெற வுள்ள 2024 உலக முதலீட்டா ளர்கள் மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ரூ.818.90 கோடிக்கு ஒப்பந்தங்கள்

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த கியோ குட்டோ சாட்ராக் நிறுவனம்,  காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 113  கோடியே 90 லட்சம் முதலீட்டில் டிரக் வாகனங்க ளுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. மேலும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக் கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன  தொழிற்சாலையை ரூ. 155 கோடியில் விரிவாக்கம், ரூ.200 கோடியில், பாலி கார்பனேட் தாள், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ரு ஷன் லைன்கள் ஆகிய வற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற் காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. இதேபோல், ரூ. 200 கோடி யில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகர ணங்கள் துறையில் பயன் படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி  செய்வதற்கான தொழிற் சாலை, ரூ.150 கோடி முதலீட்டில் சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு  நெகிழ்வான குழல்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற் சாலையை நிறுவு வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.