சென்னை, டிச.29 - நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டிச 17,18 ஆம் தேதி வரலாறு காணாத அளவு அதி கனமழை பெய்தது. அதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங் களில் பல வட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டிருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில், அதனைச் சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோச மானது. மக்களைக் காப்பாற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத் தினார். மேலும் 10 அமைச் சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைத்தார். ராணுவ வீரர்கள் 168 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக, 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு, 141 நிவாரண முகாம்களில் தங்க வைக் கப்பட்டு, உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக் கப்பட்டது. இதையடுத்து கடந்த டிச.21 ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாதிக் கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளை ஆய்வு செய்தார். பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங் களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் ரூ. 1000 வழங்கப்படும் எனவும் அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிவார ணப் பணிகளை மேற்கொள் வது தொடர்பாக வெள்ளி யன்று (டிச.29) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதி காரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனை நடத்தினார். அப்போது, “வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசின் நிவாரண உதவிகள் 100 விழுக்காடு பொது மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.