tamilnadu

img

பத்திரிகை சுதந்திர தினம் பாஜக மீது முதலமைச்சர் விமர்சனம்

பத்திரிகை சுதந்திர தினம்  பாஜக மீது முதலமைச்சர் விமர்சனம்

சென்னை, மே 3 - “பத்திரிகை சுதந்திரத்தை காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரும் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்து கொள்ளும், அதி காரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம்  என்னவென்றால், ஒன்றிய பாஜக ஆட்சி  கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் ரெய்டு நடத்து கிறது; செய்தியாளர்களைச் சிறையில் தள்ளு கிறது, பாஜக அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாதப் போக்கை அம்பலப்படுத்து வோர்களை அடக்குகிறது. உலக பத்திரிகை சுதந்திர  நாளான இன்று (மே 3), யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி  இருளில் மாண்டு விடும் என்பதை நமக்கு நாமே நினை வூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல; குடிமக்கள் அனைவ ரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்து  கொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கான தாக ஆகிறது” என்று கூறியுள்ளார்.