tamilnadu

img

தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு

சென்னை, நவ.26- நெல்லையில் சனிக்கிழமை (நவ.26) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், “தமிழ்ச் சமூக மானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பா ட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாக வும் அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடையபெருமை. இந்தப் பெருமையினை அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறி வுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக் கள் நடைபெறவுள்ளன. தமிழின் செழு மைமிகு இலக்கிய, மரபுகளைப் போற்றும் விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக் களைத் தமிழ்நாடு அரசு நடத்து கிறது. இதில் முதல் நிகழ்வாக,  அன்னைமடியான பொருனை ஆற்றங் கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி. “அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு” என்று பாவேந்தர் சொன்னதற் கிணங்க நமது தமிழ் மண்ணின் செழு மைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழா விற்கு எனது வாழ்த்துகள். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்”.

;