tamilnadu

img

பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம்

சென்னை, மே 13- பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் கர்நாடக மாநில மக்கள் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலை தளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், கர்நாட கத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தியை, நாடாளு மன்றத்தில் இருந்து பதவி நீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சி களுக்கு எதிராகத் தவறா கப் பயன்படுத்தியது. இந்தித் திணிப்பு, பெரு மளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள்  மனதில் எதிரொலித்திருக் கிறது. பாஜகவின் பழி வாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர் கள் தங்கள் கன்னடிகப் பெரு மிதத்தை நிலைநிறுத்தி யுள்ளனர்.திராவிட நிலப் பரப்பில் இருந்து பாஜக  முற்றிலுமாக அகற்றப் பட்டுள்ளது.   அடுத்து, 2024 பொதுத் தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தி யாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங் களையும் மீட்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.