tamilnadu

img

கலைஞர் நினைவிடம் திறப்பு விழா

சென்னை,பிப்.21- சென்னை கடற்கரையில் பிரம் மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் வியாழனன்று (பிப்.22)   கேள்வி நேரத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற திமுக உறுப்பினர் எழிலன் இது தொடர்பாக எழுப்பிய துணை கேள்விக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்;  தலைவர் கலைஞரின் நினைவிடம் அமைக்கும் பணி முழுமை அடைந்திருக்கிறது. தலைவர் கலைஞரின் நினைவிடம்  மட்டுமல்ல; தலைவர் கலைஞரை  உருவாக்கிய, நம் தாய்த் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர்  சூட்டிய அறிஞர் அண்ணா அவர்க ளுடைய நினைவிடமும் புனரமைக்கப் பட்டு, புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அப்படிப் புதுப்பிக்கப்பட்டு இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும், தலைவர் கலைஞர் அவர்களுடைய புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிட வில்லை.  அதனை ஒரு விழாவாக இல்லாமல்,  நிகழ்ச்சியாகவே நடத்த நாங்கள்  விரும்பியிருக்கிறோம். முடிவெடுத் திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத்  தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக் கும் தங்கள் மூலம் அழைப்பு விடுக்கி றேன்” என்றார்.