tamilnadu

img

கேரளாவை சிறுமைப்படுத்த முயற்சிக்கும் பிரதமர்

கோழிக்கோடு, மே 1- கேரளாவில் பிரதமர் நடத்திய அர சியல் உரையில் உண்மையில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறி னார். வேண்டுமென்றே கேரளாவை சிறு மைப்படுத்த முயன்றதாகவும் அவர் குற்  றம் சாட்டினார். ஓஞ்சியம் மாவீரர் வாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாபெரும் பேர ணியை முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திரு வனந்தபுரத்தில் நடைபெற்ற அதிகாரப்  பூர்வ நிகழ்ச்சியில், கேரளா நாட்டுக்கே  முன்னோடி என்று கூறிய பிரதமர், எர்  ணாகுளத்தில் அரசியல் உரை நிகழ்த்தி னார். அவரது உரைக்கும் உண்மைக்  கும் சம்பந்தம் இல்லை. பல விசயங் களில் கேரளா பின்தங்கியுள்ளது என் றார். அது எந்த வகையில் என்று குறிப்  பிட வேண்டும். கேரளத்தில் 64,006 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கேரள  மக்கள் தொகையில் 0.7 சதவிகிதம் ஆகும். அதை இலகுவாக எடுத்துக்  கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வில்லை. அவர்களை வறுமையிலி ருந்து மீட்க திட்டம் தீட்டப்படுகிறது. நாட்டில் இதே போன்ற நடவடிக்கை களை எடுத்த மற்றொரு மாநிலம் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் இல்லை என்பது பிர தமரின் மற்றொரு புகார். கடந்த ஏழு ஆண்டுகளில், பி.எஸ்.சி., மூலம், ஏழு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 30,000 புதிய அரசு வேலைகள் உரு வாக்கப்பட்டன. பொதுத்துறை நிறு வனங்களில் சிறப்பு நியமன வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. 2021இல் மட்டும் 26,724 பேர் பிஎஸ்சி மூலம் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பது மற்றொரு குற்  றச்சாட்டு. லைப் திட்டத்தில் மூன்றரை  லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கப்பட் டுள்ளன. 2,31,000 பேருக்கு பட்டா வழங்  கப்பட்டது. 63 லட்சம் பேருக்கு நல ஓய்வூ தியம் வழங்கப்படுகிறது. 43 லட்சம் குடும்பங்கள் சுகாதாரத் திட்டத்தின் கீழ்  உள்ளன. அரசாங்கம் நாட்டின் நலனை  முதன்மைப்படுத்தியுள்ளது என்பதை மக்கள் அறிவர். 2016 ஆம் ஆண்டு எல் டி எப் அர சாங்கம் ஆட்சிக்கு வந்தபோது வேலை யின்மை விகிதம் 12 சதவிகிதமாக இருந்  தது. இது ஐந்து சதவிகிதமாக குறைந் துள்ளது. இளைஞர்களுக்கு 10 கோடி  வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி  ஆட்சிக்கு வந்த பாஜக, இருந்த வேலை  வாய்ப்பை கூட இல்லாதொழித்தது. மத்திய மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிரதமரின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் உள்ள நியமனங்கள்கூட செய்யப்பட வில்லை. ரயில்வேயில் மூன்று லட்சம்  பணியிடங்கள் காலியாக உள்ளன. ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கூட ஒப் பந்த அடிப்படையில்தான் நடந்தது. மத்தியப் பணியிலும் கடைநிலை பணிக்  கான நியமனம் ரத்து செய்யப்பட்டுள் ளது. கேரளாவை குற்றம் சாட்டும் போது,  சொந்த அணுகுமுறையை நினைவில் கொள்வது நல்லது என்றார் முதல்வர்.