புதுக்கோட்டை, ஜூன் 2- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 8-ஆம் தேதி புதுக்கோட்டைக்கு வரு கை தரவுள்ளார். அவரது வரு கையினையொட்டி, புதுக்கோ ட்டை மாவட்ட விளையாட்டரங் கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. அதற்கான மேடை, பந்தல் அமைக்கும் பணிகளுக்கான, கால்கோள் நடும் நிகழ்வினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். இந்நிகழ்வில், புதுக்கோ ட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் த.ஜெயலட்சுமி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கவிதைப்பித்தன், உதயம் சண்முகம், மாவட்ட செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் ரெ.மதி யழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.