tamilnadu

img

சமூகநீதிக்கு பேராபத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சென்னை, நவ.12- பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது என்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் சனிக்கிழமையன்று (நவ.12)  தலைமைச் செயலகத்தில், பொருளாதா ரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப் பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, க.பொன் முடி மற்றும் பி.வில்சன் எம்.பி., (திமுக),  செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா  எம்எல்ஏ (காங்கிரஸ்), எஸ்.பி. வெங்க டேஷ்வரன் எம்எல்ஏ, வழக்கறிஞர் பாலு (பாமக), வைகோ, சதன்திருமலைகுமார் எம்எல்ஏ  (மதிமுக),  தொல்.திருமாவள வன், கே.ரவிக்குமார் (விசிக), ஆர். முத்த ரசன்,  நா.பெரியசாமி (சிபிஐ), வி.பி.நாகை மாலி எம்எல்ஏ, மா.சின்னதுரை எம்எல்ஏ (சிபிஎம்), எம்.எச்.ஜவாஹிருல்லா, ப.அப் துல் சமது (மமக), ஏ.கே.பி. சின்ராஜ் மற்  றும் சூரியமூர்த்தி (கொமதேக) வேல்முரு கன் (தவாக)  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக்கு பேரா பத்து சூழ்ந்திருக்கிறது. சாதியின் பெய ரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதி லிருந்து மீட்டு, கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து, அனைத்திலும் முன்னேற்றுவதற்கு பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதி கொள்கை” என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவில், சமூக, கல்வி ரீதியாக  பின்தங்கியவர்கள் என்றுதான் வரையறை யில் உள்ளது. அதேதான், அரசியல மைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி யவர்களுக்கு தரவேண்டும் என்பதுதான்,  இந்திய அரசியலமைப்பு சட்ட வரை யறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகை யில், பொருளாதாரத்தை அளவுகோலாக புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. அதன் படி ஒரு சட்டத்தை 2019 ஆம் ஆண்டு செய்  தார்கள். அந்த சட்டத்தைத்தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர் வில் 3 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்ப ளித்துள்ளனர். சமூகத்தில் முன்னேறிய சாதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்  றிய பாஜக அரசின் திட்டம் எனவும் முதல்  வர் தெரிவித்தார். “இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர்,  இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதாரிக்கி றார்கள். இதனை விளக்கமாக நான் சொல்ல தேவையில்லை. எந்த நோக்கம் இருந்தாலும், பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசி யலமைப்பு சட்டத்திற்கும் முரணானது” என்று அவர் பேசினார்.

புறக்கணிப்பு

இந்த கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சி யான அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணி களுடன் புரட்சி பாரதம், பாஜக ஆகிய கட்சி கள் புறக்கணித்தன.

தீர்மானம்

இந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட  தீர்மானம் வருமாறு:- முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதி தத்து வத்துக்கு முரணானது என்பதாலும்,  உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்பு களுக்கு எதிராக இருப்பதாலும், ஏழை களில் சாதிப் பிரிவினையைக் கற்பித்  துப் பாகுபாடு காட்டுவதாக இருப்ப தாலும், அதனை நிராகரிக்கிறோம். இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசி யல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்  நாடு அரசும் உரிய முறையில் சமூக நீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய  வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றோம். ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட் டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க  அனுமதிக்க மாட்டோம். சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டி லிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம்  அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவி கரமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.